வியாழன், 27 ஏப்ரல், 2017

இஸ்லாமிய பெண்கள் தொழில் தொடங்க உதவி! April 27, 2017

இஸ்லாமிய பெண்கள் தொழில் தொடங்க உதவி!


காஞ்சிபுரம் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவி சங்கம் சார்பில் இஸ்லாமிய பெண்களுக்கு தொழில் தொடங்க நிதி உதவி வழங்கப்பட்டது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலில், இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஒப்புதலின் படி நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் முரளி கலந்து கொண்டு நிதியுதவிகளை வழங்கினார். 

302  ஏழை விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட இஸ்லாமிய பெண்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டது. மேலும் ஏழை மாணவிகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.