ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

ஜெயலலிதா கைரேகை விவகாரம்: சி.பி.ஐ விசாரணைக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்! September 24, 2017

​ஜெயலலிதா கைரேகை விவகாரம்: சி.பி.ஐ விசாரணைக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!


மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைக்கப்பட்ட விவகாரம் குறித்து, சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என, எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை யாரும் சந்திக்காதபோது, 3 தொகுதி இடைத்தேர்தலில் கைரேகை பெற்றது எப்படி? என வினவியுள்ளார். 

தன்வசம் இருந்த இலாகாக்களை, ஓ. பன்னீர்செல்வத்திற்கு மாற்ற, ஆளுநருக்கு பரிந்துரைத்து, ஜெயலலிதா கையெழுத்திட்டாரா? என கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின், இந்த மர்மங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு 
தாமதமின்றி உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மு.க.ஸ்டாலினின் இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts:

  • பலவகை ஆக்கிரமிப்பு பள்ளிக்கரணை சதுப்பு நிலமென்பது சற்றேறக்குறைய 12000 ஏக்கர் பரப்பு கொண்டது. அது பலவகை ஆக்கிரமிப்புகளால் அபகரிக்கப்பட்டு தற்போது வெறும் 1470 ஏக்கர் என்ற… Read More
  • ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல் !!! நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ்,மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான்… Read More
  • குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள் ட்கோக்க கோலா” குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள்இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவலாக அனைவராலும் விரும்பி பருகப்படும்… Read More
  • மீலாது விழா' அன்பிற்கினிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல் அடியார்களே.!! ரபீஉல் அவ்வல் மாதமும் ; முஸ்லிம்களும் ...!!! இஸ்லாமிய மாதங்களில் மூன்றாவது மாதமான இந்த '… Read More
  • Money Rate Top 10 Currencies   By popularity Currency Unit INR per Unit Units per INR USD United States Dollars 67.1067797671 0.0149016… Read More