வெள்ளி, 29 செப்டம்பர், 2017

​நொய்யல் ஆற்றைத் தொடர்ந்து ஓசூர் கெலரப்பள்ளி அணை தண்ணீரில் பொங்கும் ரசாயன நுரை..! September 29, 2017

​நொய்யல் ஆற்றைத் தொடர்ந்து ஓசூர் கெலரப்பள்ளி அணை தண்ணீரில் பொங்கும் ரசாயன நுரை..!


கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், நீருடன் அதிக அளவு நுரையும் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

44.28 அடி கொண்ட கெலவரப்பள்ளி அணையில் தற்போது 43.70 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இதனால், கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு கெலவரப்பள்ளி அணையிலிருந்து அதிகப்படியான நீர் திறந்துவிடப்படுகிறது. 

கெலவரப்பள்ளி அணைக்கு அருகில் உள்ள தட்டிகானப்பள்ளி மற்றும் பாத்தகோட்டா தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

வெள்ள நீரில் ரசாயன நுரை சேர்ந்தே வருவதால், தரைப்பாலம் அமைந்துள்ள பகுதிகளில் மலைபோல் நுரை குவிந்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், ரசாயன நுரையை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து பாயும் தென் பெண்ணை ஆற்றின் மூலம் அணைக்கு தண்ணீர் வருவதால், வழியில் உள்ள ரசாயன ஆலைகள் தங்கள் கழிவுகளை ஆற்றில் கலக்கவிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, ரசாயன நுரை ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts:

  • காணவில்லை கட்டாயம் ஷேர் பண்ணுங்க நண்பர்களே !!இந்த பெண் கணவுருடன் கோபித்து கொண்டு குழந்தையுடன் காணவில்லை இவரை காண்பவர்கள் கீழ்க்கண்ட நம்பருக்கு தகவல்… Read More
  • 2016 சட்டமன்ற தேர்தல் இன்று காலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜகவின் ஹெஜ்.ராஜா , தமிழகத்தில் அடுத்த ஆட்சி எங்க… Read More
  • அமெரிக்க விமானத்தில் இருந்து முஸ்லிம் குடும்பம் வெளியேற்றம் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் பாதுகாப்புக் கருதி 5 பேர் கொண்ட முஸ்லிம் குடும்பத்தினரை விமான ஓட்டி வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… Read More
  • போலி வழக்கை கண்டித்து இஸ்லாமிய ஜனநாயக முன்னணி,மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதரர்.மதுக்கூர் மைதீன் அவர்கள் மீது போலி வழக்கு போட்டு,சிறை சாலைக்குள் தள்ளிய பட்டுக்கோட்டை ASP ம… Read More
  • உடனே விடுதலை செய்!! கருத்து ரீதியால் முரண்பாடுகள் இருந்தாலும் பொது எதிரியான பாசிச சங்பாரிவாரினரின் முன் என் சகோதரனை விட்டு கொடுக்க மாட்டோம்!! போலி வழக்கில் கைது செய்யப… Read More