சனி, 30 செப்டம்பர், 2017

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற திருமுருகன் காந்தி கைது! September 29, 2017

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற திருமுருகன் காந்தி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மதிமுக பொதுசெயலாளர் வைகோவை ஐ.நா வில் சிங்களர்கள் முற்றுகையிட்டத்தை கண்டித்து மே 17 இயக்கத்தினர் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, இலங்கை மீது இந்தியா பொருளாதார தடையை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை காவல் துறையினர் வலுகட்டாயமாக கைது செய்தனர்.

இது குறித்து திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, போராட்டத்தில் பங்கேற்க கூடாது என போலீசார் கூறியதாகவும், போலீசாரின் உத்தரவின்படி போராட்டத்தில் பங்கேற்காமல் ஓரமாக இருந்த டீக்கடையில் இருந்த தன்னை வலுக்கட்டாயமான போலீசார் கைது செய்து இழுத்துச் செல்வதாக கூறினார்.