சனி, 23 செப்டம்பர், 2017

கரீபியன் தீவுகளை புரட்டிப் போட்ட ‘மரியா’ புயல்..! September 22, 2017

கரீபியன் தீவுகளை புரட்டிப் போட்ட ‘மரியா’ புயல்..!


டொமினிகா குடியரசு நாட்டை கடுமையாக தாக்கிய மரியா புயலானது பாகாமஸ் நோக்கி நகர்ந்திருக்கிறது. 

கரீபியன் தீவு நாடான, டொமினிகாவை, 'மரியா' புயல் தாக்கியதில், அந்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சூறைக்காற்று வீசியதில், பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். 'அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள, 'மரியா' புயல், கடும் சூறாவளியுடன், கரீபியன் தீவு நாடுகளில் கரையை கடக்கும்' என, அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது .இந்நிலையில், கரீபியன் தீவு நாடான டொமினிகாவை நேற்று 'மரியா' புயல் தாக்கியது. மணிக்கு, 205 கி.மீ, வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

முன்கூட்டியே புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் குடியேறி உள்ளனர். இந்த புயல் பாதிப்பு டொமினிகா மக்களை புரட்டி போட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. புயலின் தாக்கம், இன்னும் முழுவதும் குறையாததால்  மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை தவிர்க்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இதற்கு முன்பு தாக்கிய இர்மா புயலுக்கு 18 பேர் கரிபியன் தீவில் பலியாகி இருந்தனர்.