செவ்வாய், 26 செப்டம்பர், 2017

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியைக்கு கத்திகுத்து! September 26, 2017

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியைக்கு கத்திகுத்து!


மதுரை பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர் ஜெனிஃபா என்பவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறை தலைவராக பணியாற்றி வருபவர் பேராசிரியர் ஜெனிஃபா. இவர் இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். 

அப்போது அங்கிருந்த பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சம்பவத்தில் படுகாயமடைந்த பேராசிரியை ஜெனிஃபா மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீசாரின் விசாரணையில் பேராசிரியையை கத்தியால் குத்திய நபர் முன்னாள் கவுரவ விரிவுரையாளர் ஜோதிமுருகன் என்பதும், தமக்கு ஜெனிஃபா தொடர்ந்து விரிவுரையாளர் பணி அளிக்காததால் ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts:

  • மீலாது விழா' அன்பிற்கினிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல் அடியார்களே.!! ரபீஉல் அவ்வல் மாதமும் ; முஸ்லிம்களும் ...!!! இஸ்லாமிய மாதங்களில் மூன்றாவது மாதமான இந்த '… Read More
  • குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள் ட்கோக்க கோலா” குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள்இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவலாக அனைவராலும் விரும்பி பருகப்படும்… Read More
  • Money Rate Top 10 Currencies   By popularity Currency Unit INR per Unit Units per INR USD United States Dollars 67.1067797671 0.0149016… Read More
  • பலவகை ஆக்கிரமிப்பு பள்ளிக்கரணை சதுப்பு நிலமென்பது சற்றேறக்குறைய 12000 ஏக்கர் பரப்பு கொண்டது. அது பலவகை ஆக்கிரமிப்புகளால் அபகரிக்கப்பட்டு தற்போது வெறும் 1470 ஏக்கர் என்ற… Read More
  • ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல் !!! நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ்,மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான்… Read More