வெள்ளி, 29 செப்டம்பர், 2017

​வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மும்பை ரயில்நிலையத்தில் 22 பேர் பலி! September 29, 2017

​வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மும்பை ரயில்நிலையத்தில் 22 பேர் பலி!


மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் நடை மேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். 

காயமடைந்த 30பேருக்கு மும்பை கிங் எட்வர்டு நினைவு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
மேற்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட மும்பை சர்ச்கேட் - தாதர் நிலையங்களுக்கு இடையே உள்ளது எல்பின்ஸ்டன் ரயில் நிலையம். 

புறநகர் ரயில்கள் நின்று செல்லும் இந்த நிலையத்தில் குறுகிய நடைமேம்பாலத்தில் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான பயணிகள் முண்டியடித்துக்கொண்டு சென்றதால் நெரிசல் ஏற்பட்டது.  

கூட்ட நெரிசலில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. நெரிசலில் இருந்து தப்பிப்பதற்காகப் பலர் இரும்புத் தடுப்புக் கம்பிகளின் மீது ஏறி வெளிப்புறமாகத் தொங்கியபடியே இறங்கிச் சென்றனர். 

நெரிசலில் காயமடைந்த 30 பேர் கிங் எட்வர்டு நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.