செவ்வாய், 26 செப்டம்பர், 2017

அனைத்து சிறப்பு காவல் படையினரும் தயார் நிலையில் இருக்க டிஜிபி உத்தரவு! September 26, 2017

அனைத்து சிறப்பு காவல் படையினரும் தயார் நிலையில் இருக்க டிஜிபி உத்தரவு!


தமிழகம் முழுவதும் அனைத்து சிறப்பு காவல் படையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி அனுப்பிய சுற்றறிக்கையில், தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் சிறப்பு காவல் படையினர் தயாராக இருக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

போராட்டங்களை கட்டுப்படுத்த வெவ்வேறு பகுதிகளுக்கு சென்ற படைப் பிரிவினர், அந்தந்த தலைமையகங்ளில் உள்ள முகாம்களுக்கு திரும்பி வருகின்றனர். பொதுவாக அசாதாரண சம்பவங்களின் போது, இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் நிலையில், தற்போது மாநகர காவல் ஆணையர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, இந்த உத்தரவு குறித்து நியூஸ் 7 தமிழிடம் தொலைபேசி வாயிலாக பேசிய டிஜிபி ராஜேந்திரன், சிறப்பு காவல்படை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவு வழக்கமானது என தெரிவித்தார். இது குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் டிஜிபி கூறினார்.