புதன், 27 செப்டம்பர், 2017

​கூர்காலாந்து கோரி நடத்தப்பட்டு வந்த காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்..! September 27, 2017

​கூர்காலாந்து கோரி நடத்தப்பட்டு வந்த காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்..!


மேற்குவங்கத்தில் கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் தங்களின் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனர்.

கூர்காலாந்து தனி மாநிலம் கோரி, பீமல் குராங் தலைமையிலான கூர்க்கா ஜன் முக்தி மோர்ச்சா அமைப்பினர் கடந்த ஜூன் 15-ம் தேதி முதல், 102 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததுடன், முழு கடையடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். 

இதனால் டார்ஜீலிங், காலிம்போங் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் போராட்டத்தை கைவிடுமாறும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முன்வருமாறும் போராட்டக் குழுவினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்திருந்தார். 

இதனை ஏற்றுக் கொண்டுள்ள போராட்டக்குழுவினர், தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் 104 நாட்களாக நீடித்துவந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.