அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை சனிக்கிழமை அன்று டவ்தே புயலாக உருமாறி, வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. தென்கிழக்கு அரபிக் கடலில் இந்த புயல் உருவான காரணத்தால் அரபிக் கடலோர மாவட்டங்களில் மிகக்கனமழை பெய்தது. மேலும் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோரம் அமைந்திருக்கும் மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
தேனி மாவட்டத்தில் மலையை ஒட்டிய பகுதிகளான ஊத்தாங்கரை, பிச்சாங்கரை, உலக்குருட்டு, வடக்குமலை, போடிமெட்டு போன்ற பகுதிகளிலும் மிகக் கனமழை பெய்தது. அதனால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மாங்காய்கள் அனைத்தும் உதிர்ந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது
source https://tamil.indianexpress.com/tamilnadu/cyclone-tauktae-ops-visited-cyclone-damaged-areas-in-bodi-mettu-303913/