செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு

 தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 31 08 2021 தமிழ் வளர்ச்சித்துறையில் 20 புதிய அறிவிப்புகளை சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வெளியிட்டார். அதன்படி, தமிழறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பிறந்த நாளன்று இலக்கியக் கூட்டங்கள் நடத்த 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்றும், கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள்...

பள்ளிகள் திறப்பு; அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு

 வகுப்புகள் தொடங்கினாலும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாம்கள் எந்தவொரு இடையூறு இல்லாமல் தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 31 08 2021சென்னை அயனாவரம் ESIC மருத்துவமனையில் புதிய சிகிச்சைப் பிரிவை தொடங்கி வைத்தபின், மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும் திட்டத்தையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, கணேசன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,...

சிப்காட் ஒரகடத்தில் மருத்துவ உபகரண தொழிற்பூங்கா

 தமிழ்நாட்டில், திண்டிவனம், மணப்பாறை, தேனி ஆகிய இடங்களில் உணவு பூங்காக்கள் உருவாக்கப்படும் என தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 08 2021 சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பில், சிப்காட் நிறுவனத்தால் நிறுவப்பட உள்ள துறை சார்ந்த பூங்காக்களின் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாட்டிலேயே முதன் முறையாக தூத்துக்குடி சிப்காட் தொழிற்பூங்காவில், ஆயிரத்து 100 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு அறைகலன்...

உச்ச நீதிமன்ற புதிய நீதிபதிகள் பதவியேற்பு

 உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள 9 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 31 08 2021 உச்ச நீதிமன்றத்துக்கு அதிகப்பட்சமாக 34 நீதிபதிகளை நியமிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த முழு எண்ணிக்கையிலான நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறது. இந்த மாதத்தில் மூத்த நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், நவீன் சின்காவும் ஓய்வு பெற்ற தால், 26 ஆக இருந்த நீதிபதிகளின்...

பள்ளி அருகே போதைப் பொருட்கள் விற்றால் கடும் தண்டனை: முதலமைச்சர்

 பள்ளி, கல்லூரி அருகே தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 31 08 2021 சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் கேள்வி நேரத்துடன் இன்று தொடங்கியது. அப்போது, பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, குட்கா, புகையிலை பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாகக் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குட்கா உள்ளிட்ட...

ஜெயலலிதா பல்கலை விவகாரம்: அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது

 ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து சாலையில் அமர்ந்து போராடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர் 31 08 2021 வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம், அதிமுக ஆட்சியில் அமைக்கப் பட்டது. திமுக ஆட்சி அமைந்ததும் இந்தப் பல்கலைக்கழகம் அண்ணாமலை...

’தமிழ்நாடு பிரஸ் கவுன்சில்’; 3 மாதத்திற்குள் அமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

 29 08 2021 மூன்று மாதத்திற்குள் ’தமிழ்நாடு பிரஸ் கவுன்சில்’ அமைக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போலி பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர்கள் சங்கங்கள் அல்லது தொழிற்சங்கங்களை களைவது மற்றும் மாநில அரசின் அடையாள அட்டைகள், பாஸ் மற்றும் பிற சலுகைகள் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது அவசியம் என்று கூறி, ‘தமிழ்நாடு பத்திரிக்கை கவுன்சில்’ அமைக்க மாநில அரசுக்கு மூன்று மாத காலக்கெடுவை சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது.உச்ச...

எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை வானிலை மையம் தகவல்

 கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி,...

சீமான் பாஜகவின் பி.டீம் : காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம்

 30 08 2021 )Tamilnadu News : தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கே.டி.ராகவன். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் குறித்து சர்ச்சை வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவியது. பாஜகவை சேர்ந்த நிர்வாகி ஒருவரே இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த குற்றச்சாட்டை மறுத்த கே.டி.ராகவன், தமிழக பாஜகவில் தனது பொதுச்செயலாளர்...

தெரியாமல் தவறு நடந்திருந்தாலும் பொறுப்பு; பி.டி.ஆர் எச்சரிக்கை!

 20 08 2021 சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, உதவிப் பொறியாளர், உதவி நிர்வாக பொறியாளர் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.சென்னை புளியந்தோப்பு கேபி.பார்க்கில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் விரைவிலேயே சிமெண்ட் பூச்சு உதிர்ந்து விழுவது குறித்து அங்கே சமீபத்தில் குடியமர்த்தப்பட்ட பொதுமக்கள் குற்றம்...

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உறுதி:

 30 08 2021 திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டம் சூசகமாக தெரிவித்துள்ளார்.நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானதைத் தொடர்ந்து, தேர்தல் அறிக்கையில் உறுதிய அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டுவருகிறது....

இந்தியாவில் இப்படி ஒரு நதியா? மலைகளின் நடுவே தவழ்ந்து செல்லும் தீஸ்தா நதி

 இந்தியா இயற்கை வளங்களில் மற்ற நாடுகளை விஞ்சி விடும் அளவிற்கு செழிப்பாகவும் வளமையாகவும் இருக்கிறது. ஆனாலும் என்னவென்றால், பல்வேறு தேவைகளுக்காக காடுகள் வெட்டப்பட்டும், மலைகள் குடையப்பட்டும் கொஞ்சம் கொஞ்சமாய் அந்த செம்மையை நாம் இழந்து வருகிறோம்.. 315 கி.மீ நீளம் கொண்டுள்ள இந்த நதியானது கிழக்கு இமயமலைகளில் உருவாகி, சிக்கிம், மேற்கு வங்கம் வழியே பயணித்து, வங்கதேசத்திற்குள் நுழைகிறது. 12,370 சதுரை கிமீ பாசனத்திற்கு உதவும் இந்த நதியானது இறுதியாக வங்கக்...

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

சுதந்திர தின கொண்டாட்ட போஸ்டரில் நேருவை தவிர்த்த ICHR; ப.சிதம்பரம் கடும் விமர்சனம்

 நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போஸ்டரில் ஜவஹர்லால் நேருவை தவிர்த்ததற்காக எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சந்தித்த இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ICHR) இந்த பிரச்சனை சர்ச்சை தேவையற்றது என்று கூறியுள்ளது. வரும் நாட்களில் வெளியிடப்படும் மற்ற போஸ்டர்களில் நேரு படம் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளது.“இந்த இயக்கத்தில் யாருடைய பங்கையும் குறைத்து மதிப்பிடுவதற்கு...

5 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்த நடவடிக்கை:

 தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று (ஆக.27) பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய திருவையாறு தொகுதி திமுக உறுப்பினர் துரைசந்திரசேகர், ‘‘தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை கடந்து வருவதில் அவமானம் ஏற்படுகிறது. வாகனத்தில்...