சனி, 28 ஆகஸ்ட், 2021

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு

 27 08 2021

Tamilnadu News Update : தமிழக ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகார் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1940 ம் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவர் பன்வாரிலால் புரோகித். தொடர்ந்து அரசியலில் கவனம செலுத்திய அவர் கடந்த 2016-ம் ஆண்டு அசாம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  தமிழக ஆளுநராக இருந்த வித்தியாசகர்ராவ் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு பன்வாரிலால் புரோகித்  தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

தமிழக ஆளுநராக இருந்து வரும் அவருக்கு தற்போது பஞ்சாப் மாநில ஆளுநர் மற்றும் சண்டிகார் யூனியன் பிரதேசத்தில் நிவர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஜனாதிபதி மாளிகை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராகவும் ஒன்றிய ஆட்சிப் பகுதியான சண்டிகரின் நிர்வாகியாகவும் கூடுதல் பொறுப்பாக செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-governor-banwarilal-purohit-appointed-punjab-governor-336500/