செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

வரலாற்றில் இடம்பெரும் இன்றைய சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்.

 8 2 2022 

இன்று ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர் நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளில் ஒன்றாகும்.

காலை 10 மணிக்கு கூடும் சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 2021 தமிழ்நாடு இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை சட்ட முன் வடிவு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், 2021-தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவை நிறைவேற்ற கோரவுள்ளார். பிறகு காலை 10 மணிக்கு கூடும் சிறப்புக் கூட்டத்தில் தமிழ்நாடு இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை சட்ட முன் வடிவு நிறைவேற்றப்படவுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக ஒரு சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக கூடும் சட்டமன்ற கூட்டம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு வருடங்களாக கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று ஜார்ஜ் கோட்டையில் நடைபெறுகிறது. திமுக ஆட்சி அமைந்தவுடன் ஜார்ஜ் கோட்டை சட்டமன்ற அரங்கில் நடைபெறும் முதல் கூட்டம் சிறப்பு கூட்டமாக நடைபெறுகின்றது.

கடந்த ஆட்சிக்காலத்தில் எதிர்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அறை புதுப்பிக்கப்பட்டு அதிமுகவிற்காக தயாராகியுள்ளது. சட்டமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட அறையே புதுப்பிக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/todays-special-legislature-session-that-will-go-down-in-history.html

Related Posts: