புதன், 6 மே, 2026

யு.ஏ.இ துறைமுகத்தின் மீது ஈரான் தாக்குதல்.

 

யு.ஏ.இ துறைமுகத்தின் மீது ஈரான் தாக்குதல்.

iran

அமெரிக்​கா, ஈரான் இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்றது. தற்போது இருதரப்பு இடையே போர் நிறுத்​தம் அமலில் உள்​ளது. எனினும் ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரானும் அமெரிக்கா​வும் முடக்கி வைத்து உள்ளன. இந்த சூழலில் அமெரிக்கா​வின் நட்பு நாடான ஐக்​கிய அரபு அமீரகத்​தின் புஜைரா துறை​முகத்தின் மீது ஈரான் ராணுவம் 15 ஏவு​கணை​களை வீசி​யுள்ளது. மேலும் ட்ரோன்​கள் மூல​மும் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் துறை​முக பகு​தி​யில் பணி​யாற்​றிய 3 இந்​தி​யர்​கள் படு​கா​யம் அடைந்தனர்.

இதுகுறித்து அமீரக ராணுவ வட்​டாரங்​கள் கூறும்​போது, ‘‘ஈரான் வீசிய ஏவு​கணை​களில் பெரும்பாலானவற்றை நடு​வானில் அழித்​து​விட்​டோம். ஆனால் சில ஏவு​கணை​கள் எண்ணெய் கிடங்​கு​களில் விழுந்து தீப்பற்றியது. 3 தொழிலா​ளர்​கள் காயமடைந்​தனர். அவர்​களுக்கு மருத்​து​வ​மனை​யில் உயர்தர சிகிச்சை அளிக்​கப்​படு​கிறது’’ என்று தெரிவித்​தன.



source https://tamil.indianexpress.com/international/iran-drone-strike-in-uae-3-indians-injured-modi-condemn-11805253