இந்தியாவில் விற்கப்படும் பாலில், சோப்பு தூள், வெள்ளை பெயின்ட், சோடா கலக்கப்பட்டுள்ளதாக நாடளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளார். |
நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷவர்தன் இதனை தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், நாட்டில் அன்றாடம் வினியோகிக்கப்படும் பால் குறித்து உணவுப் பொருள் ஒழுங்குமுறை அமைப்பினர் நடத்திய ஆய்வில் 68% பால் தரமானதாக இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலில் உடலுக்கு சோப்புத் தூள், காஸ்டிக் சோடா, குளுக்கோஸ், வெள்ளை பெயிண்ட், ரீபைண்ட் எண்ணெய் போன்ற கேடு விளைவிக்கும் பொருட்கள் கலக்கப்படுகின்றன.
முன்பு பாலில் கலக்கப்பட்டுள்ள பொருட்களை கண்டுபிடிக்க ஒவ்வொன்றுக்கும் தனிதனியாக சோதனை நடத்த வேண்டியிருந்தது.
ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஸ்கேனர் இதை எளிதாக்கி உள்ளது.
ஒவ்வொரு சோதனைக்கும் ஆகும் செலவு வெறும் 10 பைசாதான். இந்த நவீன ஸ்கேனர் கருவிகள் மூலம் 40 வினாடிகளில் பாலில் கலப்படம் உள்ளதா என்பதையும், எந்த அளவிற்கு அதில் கலப்படம் இருக்கிறது என்பதையும் துல்லியமாகக் கண்டுபிடித்து விடலாம்.
ஒவ்வொரு எம்.பி.யும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த நவீன ஸ்கேனர்களை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
|
வியாழன், 17 மார்ச், 2016
Home »
» இந்தியாவில் விற்கப்படும் பாலில் சோப்பு தூள், பெயிண்ட் கலப்படம்: அதிர்ச்சித் தகவல்
இந்தியாவில் விற்கப்படும் பாலில் சோப்பு தூள், பெயிண்ட் கலப்படம்: அதிர்ச்சித் தகவல்
By Muckanamalaipatti 9:36 PM
Related Posts:
மின்சார சட்ட விதிகளின்படியே, மின்கட்டணம் கணக்கீடு : தமிழக அரசு திட்டவட்டம்மின்சார சட்ட விதிகளின்படி, ஊரடங்கு காலத்தின் போது, முந்தைய கட்டண தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என சென்னை உயர் நீ… Read More
1918-ல் ஸ்பானிஷ் காய்ச்சல், இப்போ கொரோனா: தட்டித் தூக்கிய 106 வயது இரும்பு மனிதர்டெல்லி ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 106 வயது நிரம்பிய முதியவர், வெற்றிகரமாக நோயில் இருந… Read More
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் மோசடி; மனநலம் பாதித்தவருக்கு வரவேண்டிய பணம் கையாடல்!Pradhan Mantri Awas Yojana என்ற திட்டம் 2015ம் ஆண்டில் பிரதமர் மோடியால் அறிமுகம் செய்யப்பட்டது. அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் இந்த ஸ்கீம் அற… Read More
ரேஷனில் நவம்பர் வரை விலையில்லாமல் அரிசி!நவம்பர் மாதம் வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக கூடுதல் அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல், மே, ஜ… Read More
கொரோனா வைரஸ் காற்றுவழி பரவக்கூடியது; WHO பரிந்துரைகளை திருத்த விஞ்ஞானிகள் கடிதம்காற்றில் சிறிய துகள்களில் உள்ள கொரோனா வைரஸ் மக்களை பாதிக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், வி… Read More