வியாழன், 31 மார்ச், 2016

பொய் வழக்கிற்கு, பலி கேடாவாக முஸ்லிம்கள் என்ன இழிச்ச வாயர்களா....



இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளரும்,எங்கள் பாசத்திற்குரிய அண்ணன் மதுக்கூர் மைதீன் அவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று, இருக்கும் இடம் தெரியாமலே, ஒழித்து வைத்து கொண்டு சித்து விளையாட்டு விளையாடும் காவல்துறையே...
பொய் வழக்கிற்கு, பலி கேடாவாக முஸ்லிம்கள் என்ன இழிச்ச வாயர்களா....
இந்த செயலை வன்மையாக கண்டித்து இஸ்லாமிய ஜனநாயக முன்னணி,திருச்சி மாவட்டத்தின் சார்பாக,அரசு மருத்துவமனை பிரதான சாலை இரவு 10:30 மணியளவில் சாலை மறியல் செய்யப்பட்டது.
சாலை மறியலுக்கு பிறகு கைது நடவடிக்கை அறங்கேறியது.
மதுக்கூர் மைதீனை விட மறுத்தால்,தமிழக சாலைகள் இயங்க மறுக்கும்...
இன்ஷா அல்லாஹ்.
நாளை காலை, மதுரை,திண்டுக்கல்,பட்டுகோட்டை,அதிரை,நத்தம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டம் மற்றும் ஒன்றியங்களில் சாலை மறியல் போராட்டம்.