தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நாளை அனல் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகை, புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாகும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என வானிலை ஆய்வு மையம் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளது.
பகலில் தேவையின்றி வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளது.
நண்பகல் 12 மணியில் இருந்து 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பகலில் வெளியில் வருவதை தவிர்க்க மக்களுக்கு ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.