
அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அவர் சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு ஆட்சியை நடத்த முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது எனவும், கட்சியும், ஆட்சியும் காப்பாற்றப்பட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் விரும்புவதாக கூறினார். எனவே, தினகரன் சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைப்பதாக முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் அனைவரும் இணைந்து கட்சியையும், சின்னத்தையும் மீட்டெடுப்போம் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். ஓ பன்னீர்செல்வத்துடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார். கட்சியை வழிநடத்த புதிதாக குழு அமைக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது எனவும், கட்சியும், ஆட்சியும் காப்பாற்றப்பட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் விரும்புவதாக கூறினார். எனவே, தினகரன் சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைப்பதாக முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் அனைவரும் இணைந்து கட்சியையும், சின்னத்தையும் மீட்டெடுப்போம் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். ஓ பன்னீர்செல்வத்துடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார். கட்சியை வழிநடத்த புதிதாக குழு அமைக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.