
கழிவறை கட்டாதவர்கள் தங்களது மனைவிகளை விற்றுவிடுங்கள் என அவுரங்காபாத் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் தூய்மை தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆட்சியர் கன்வால் தனுஜ், ஒவ்வொருவரின் வீட்டிலும் கழிவறை கட்டாயமாக கட்டப்பட வேண்டும், அதற்கு அரசு உதவித்தொகையும் அளித்து வருகிறது என பேசிக்கொண்டிருந்தார்.
ஆட்சியர் பேசிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டு பேசிய 50 வயது மதிக்கத்தக்க கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தான் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவன் என்றும், அரசு தரும் மானியத்திலிருந்து முன்பணமாக ஒரு தொகையை தர வேண்டும் என கூறினார்.
தான் பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்கிட்டதால் கடுப்பாகிப்போன ஆட்சியர்
ஒரு கழிவறை கட்ட 12ஆயிரம் ரூபாய் தான் செலவாகும் என்றும், அதை செய்யமுடியாவதவர்கள் தங்களது மனைவியை விற்றுவிடுங்கள் என சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
தன்னிலை விளக்கம்:
பின்னர் தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், உங்கள் மனைவியின் பாதுகாப்புக்காக 12,000 ரூபாய் செலவு செய்யமாட்டீர்களா என்றும், இயற்கை உபாதைகளை கழிக்க செல்லும் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது என்றும் எனவே வீட்டில் கழிவறையை மனைவியின் நலனுக்காயினும் கட்டாயம் கட்டப்பட வேண்டும் என்று பேசி முடித்தார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த சர்ச்சைப் பேச்சு தற்போது கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறது.
பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் தூய்மை தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆட்சியர் கன்வால் தனுஜ், ஒவ்வொருவரின் வீட்டிலும் கழிவறை கட்டாயமாக கட்டப்பட வேண்டும், அதற்கு அரசு உதவித்தொகையும் அளித்து வருகிறது என பேசிக்கொண்டிருந்தார்.
ஆட்சியர் பேசிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டு பேசிய 50 வயது மதிக்கத்தக்க கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தான் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவன் என்றும், அரசு தரும் மானியத்திலிருந்து முன்பணமாக ஒரு தொகையை தர வேண்டும் என கூறினார்.
தான் பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்கிட்டதால் கடுப்பாகிப்போன ஆட்சியர்
ஒரு கழிவறை கட்ட 12ஆயிரம் ரூபாய் தான் செலவாகும் என்றும், அதை செய்யமுடியாவதவர்கள் தங்களது மனைவியை விற்றுவிடுங்கள் என சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
தன்னிலை விளக்கம்:
பின்னர் தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், உங்கள் மனைவியின் பாதுகாப்புக்காக 12,000 ரூபாய் செலவு செய்யமாட்டீர்களா என்றும், இயற்கை உபாதைகளை கழிக்க செல்லும் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது என்றும் எனவே வீட்டில் கழிவறையை மனைவியின் நலனுக்காயினும் கட்டாயம் கட்டப்பட வேண்டும் என்று பேசி முடித்தார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த சர்ச்சைப் பேச்சு தற்போது கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறது.