
'பசு பாதுகாப்பு' என்ற பெயரில் நடக்கும் படுகொலைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை இன்று கூடியதும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகள் குறித்தும், பலர் அடித்துக் கொல்லப்படுவது குறித்தும் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எனினும், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, அவையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.
இதற்கிடையே, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீது பேப்பர்களை வீசி அமளியில் ஈடுபட்ட 6 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்து சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.
மக்களவை இன்று கூடியதும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகள் குறித்தும், பலர் அடித்துக் கொல்லப்படுவது குறித்தும் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எனினும், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, அவையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.
இதற்கிடையே, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீது பேப்பர்களை வீசி அமளியில் ஈடுபட்ட 6 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்து சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.