ஞாயிறு, 8 அக்டோபர், 2017

159 மணி நேரம் ஓவர் டைம் பார்த்த பெண் ஊழியர் இதயம் செயலிழந்து பலி! October 08, 2017

159 மணி நேரம் ஓவர் டைம் பார்த்த பெண் ஊழியர் இதயம் செயலிழந்து பலி!


ஜப்பான் தலைநகர் டோக்யோவில் உள்ள தனியார் செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவர் இருதய செயலிழப்பு காரணமாக கடந்த 2013ஆம் ஆண்டில் உயிரிழந்தார்.

Miwa Sado எனும் 31வயது பெண்ணான அவர் உயிரிழந்ததற்கு அதிக வேலை பளுவே காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

2013ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற பொதுத்தேர்தல் குறித்து செய்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த Miwa Sado  இறப்பதற்கு ஒரு மாதம் முன்னர் வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே விடுப்பு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், 159 மணி நேரங்கள் அவர் Over Time ஆக பணியாற்றியிருக்கும் அதிர்ச்சித்தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

2013ஆம் ஆண்டு ஜப்பானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த 3வது நாளில் Miwa Sado இருதய செயலிழப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல ஜப்பானில் கடந்த 2015ஆம் ஆண்டு 100 மணி நேரம் ஓவர் டைம் செய்து அதிக வேளை பளுவின் காரணமாக பெண் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts: