வெள்ளி, 27 அக்டோபர், 2017

​டெங்கு கொசு: வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு! October 27, 2017

​டெங்கு கொசு: வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு!



திப்பூரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த டாஸ்மாக் பார் உட்பட பல இடங்களுக்கு 8லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.இதன் ஒருபகுதியாக திருப்பூர் சந்தைப்பேட்டை அருகே உள்ள டாஸ்மாக் பாரில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி செய்யும் வகையில் சுகாதார சீர்கேடு இருந்தது.

இதையடுத்து அந்த பாருக்கு 50ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் சிறுபூலுவபட்டி , டூம்லைட் , கொங்கு நகர் ஆகிய பகுதிகளில்  உள்ள வீடுகளில்  ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், அங்கு சுகாதாரமற்ற முறையில் இருந்த வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். மேலும் வணிக வளாகம், மருத்துவமனை, வீடுகள் என பல இடங்களுக்கு 8 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர்.