ஞாயிறு, 29 அக்டோபர், 2017

300 ஏடிஎம் மையங்கள் மூடல்..! October 28, 2017

300 ஏடிஎம் மையங்கள் மூடல்..!


மத்திய அரசு டிஜிட்டல் பண பரிமாற்ற நடைமுறைக்கு முன்னுரிமை அளித்து வருவதால், நகர்புறங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு ஆதரவான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் நகர்புறங்களில் உள்ள ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கையை பல்வேறு வங்கிகள் குறைத்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 91 ஏடிஎம் மையங்களும், பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் 200-க்கும் மேற்பட்ட ஏடிஎம்களும் குறைக்கப்பட்டுள்ளன.