திங்கள், 23 அக்டோபர், 2017

"இந்தியாவிலேயே மிக மோசமான ஊழல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை தான்" - சீத்தாராம் யெச்சூரி October 23, 2017




இந்தியாவிலேயே மிக மோசமான ஊழல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை தான், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.

சென்னை பூந்தமல்லியில்,  சீத்தாராம் யெச்சூரியின் நாடாளுமன்ற உரைகள் என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கனிமொழி, டிகே ரங்கராஜன், ஆகிய எம்பிக்களும், முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், உள்ளிட்டோர் சீத்தாராம் யெச்சூரியின் புத்தகம் குறித்து பேசினர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய சீத்தாராம் யெச்சூரி, இந்தியாவில் நிகழ்ந்த ஊழல்களில் மிக மோசமான ஊழல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை தான் என குற்றம்சாட்டினார்.