சனி, 21 அக்டோபர், 2017

ஒடிசாவில் பெய்யும் கனமழையால் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு! October 21, 2017

ஒடிசாவில் பெய்யும் கனமழையால் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு!


ஒடிசாவில் கனமழையால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ஒடிசாவுக்குள் பாயும் டியோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பரிபடா பகுதியில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஒடிசா கடற்கரையோர பகுதிகளில் சுமார் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசாவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, வலுவிழந்து மேற்கு வங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் நோக்கி நகரக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.