செவ்வாய், 31 அக்டோபர், 2017

மழை காரணமாக அறுவடை பாதிப்பு; வெங்காய விலை ஏற்றம்..! October 31, 2017

ஓமலூர் வட்டாரத்தில் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி வெங்காயம் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரப் பகுதிகளில் விவசாயம் முதன்மைத் தொழிலாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் வெங்காயம் நடவு செய்திருந்தனர். 

வெங்காயம் விளைந்து அறுவடைக்குத் தயாராகும் காலத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் வெங்காயம் வயலோடு அழுகி விட்டது. இதனால், வெங்காயம் விளைச்சல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஓமலூர் சந்தைக்கு வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெங்காயம் 50 கிலோ எடைகொண்ட மூட்டை 5,000 ரூபாய் முதல் 6,500 ரூபாய் வரை விலைபோகிறது. 

சில்லறை விலையில் கிலோ 100 ரூபாயில் இருந்து 130 ரூபாய் வரை விற்பனையாகிறது. பல்லாரி வெங்காயம் கிலோ 50ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
Image