செவ்வாய், 31 அக்டோபர், 2017

சென்னை, திருவள்ளூர் உட்பட 9 கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! October 30, 2017

Image


கனமழை காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளி வகுப்புகளையும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக முடிக்க ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு.

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, இன்று காலை முதலே சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. 

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், அடுத்த 24 மணி நேரத்தில தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும் என கூறினார். 

கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். சென்னை, திருவள்ளூர் உட்பட 9 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்தார்..