சனி, 28 அக்டோபர், 2017

இந்துத்துவத்திற்கு எதிராக எழுதிய எழுத்தாளர் காஞ்சா இலையா வீட்டுச்சிறையில் அடைப்பு! October 28, 2017

இந்துத்துவத்திற்கு எதிராக எழுதிய எழுத்தாளர் காஞ்சா இலையா வீட்டுச்சிறையில் அடைப்பு!


புகழ்பெற்ற தலீத் வரலாற்று ஆய்வாளரும், இந்துத்துவ கருத்தியலுக்கு எதிராக எழுதிவரக்கூடியவருமான காஞ்சா இலையா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹைதரபாத்தில் தரங்காவில் இருக்கும் அவரது வீட்டில் காஞ்சா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிராக காஞ்சாவின் ஆதரவாளர்கள் அவர் வீட்டு வாசலில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விஜயவாடாவில் நடக்க இருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் காஞ்சா இலையா கலந்துகொண்டு உரையாற்ற இருந்தார். இதற்கு, ஆர்ய - வைஸ்ய பிராமண ஐக்கிய சங்கம் என்ற சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. 

மேலும், காஞ்சாவின் பொதுக்கூட்டத்திற்கு எதிராக பேரணி நடத்தவும் திட்டமிட்டு பின்னர் கைவிட்டது. காவல்துறை விஜயவாடாவில் பொதுக்கூட்டம், பேரணிகள், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்துள்ளது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஆர்ய - வைஸ்ய - பிராமண ஐக்கிய சங்கம் காஞ்சாவின் பொதுக்கூட்டத்திற்கு தடை கோரியது. ஆனால், உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு தடை விதிக்கும் வழிகாட்டல் எதுவும் வழங்கவில்லை.

இந்நிலையில், காஞ்சா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், காஞ்சாவின் Samaajika smugglerlu komatollu" என்ற புத்தகம் வெளியானது. இதில், ஆர்ய வைஸ்ய சமூகங்களை சமூகத்திருடர்கள் என்று காஞ்சா விமர்சித்துள்ளார். இந்நூலுக்கு தடைவிதிக்கக்கோரி உச்சநீதிமன்றம் வரை சென்ற வழக்கில், அக்.15 அன்ரு புத்தகத்திற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், தெலங்கானா - ஆந்திர அரசுகள் கருத்து சுதந்திரத்தை நெரிப்பதாக காஞ்சா விமர்சித்துள்ளார்.