சனி, 28 அக்டோபர், 2017

​பறவைகளை விரட்ட விவசாயி கண்டுபிடித்த கருவி! October 28, 2017



​பறவைகளை விரட்ட விவசாயி கண்டுபிடித்த கருவி!

இந்தியாவின் வடமாநில விவசாயி ஒருவர் வேளாண் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் பறவைகளை விரட்டக் கையாளும் புதிய யுக்தி இணையதளங்களில் பரவி வருகிறது.

காற்றாடியின் தகடுகளையும், வீணாகக் கிடக்கும் சில உலோகப் பொருட்கள் மற்றும் ஒரு தட்டைப்  பயன்படுத்தி அந்த விவசாயி உருவாக்கியுள்ள ஒரு இயந்திரம் காற்றின் ஆற்றலால் இயங்கக்கூடியது.

காற்று வேகமாக வீசும் பொழுது, அதில் பொருத்தப்பட்டுள்ள இரும்புச் சங்கிலியின் கண்ணி, அந்த தட்டில் வேகமாகத் தட்டி ஒலி எழுப்பும். 

இது ஒரு மனிதன் வட்டிலைத் தட்டிக்கொண்டே செல்வது போல் தோன்றுவதால் பறவைகள் பயந்துகொண்டு வெகுதொலைவுக்குச் சென்று விடுகின்றன.

Related Posts: