சனி, 21 அக்டோபர், 2017

வங்கிக் கணக்குடன், ஆதார் எண் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை: ரிசர்வ் வங்கி October 21, 2017

வங்கிக் கணக்குடன், ஆதார் எண் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை: ரிசர்வ் வங்கி


வங்கிக் கணக்குடன், ஆதார் எண் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

மத்திய அரசின் நலத் திட்டங்களின் கீழ் உதவி பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களும், புதிதாக கணக்கு துவங்குபவர்களும், டிசம்பர் 31-க்குள், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டெல்லியைச் சேர்ந்த செய்தி இணையதளம் ஒன்று, தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ், ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்டது. அதற்கு, வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிக் கணக்குடன், ஆதார் எண்ணை, கட்டாயம் இணைக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.