ஞாயிறு, 29 அக்டோபர், 2017

ஏடிஎம் காவலாளியை சுத்தியலால் கொடூரமாக தாக்கிய கொள்ளையன்! October 29, 2017

ஏடிஎம் காவலாளியை சுத்தியலால் கொடூரமாக தாக்கிய கொள்ளையன்!


கோவா தலைநகர் பனாஜியில், வங்கி ஏடிஎம் மையம் ஒன்றில் கொள்ளையை தடுக்க முயன்ற காவலரை, அந்த கொள்ளையன் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

சுத்தியலால் அந்த கொள்ளையன் கொடூரமாக தாக்குதல் நடத்தும் காட்சி, கண்போரை பதற வைக்கும் வகையில் உள்ளது. ஒரு வழியாக போராடி, கொள்ளையனிடம் இருந்து சுத்தியலை பறித்த காவலர், திருப்பித்தாக்க முயன்றபோது, கொள்ளையன் தப்பியோடி விட்டான்.

காவலாளியின் இந்த துணிச்சலான நடவடிக்கையால், ஏடிஎம்-மில் இருந்த பணம் தப்பியது. இந்த கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக, கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை வைத்து, குற்றவாளியை தேடி வருகின்றனர்.

பனாஜியில் காவல்துறை தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம், கோவா மக்களை பீதியடைய வைத்துள்ளது.

Related Posts: