ஞாயிறு, 22 அக்டோபர், 2017

கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் - அறிவாலயம் வர வாய்ப்பு! October 22, 2017

கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் - அறிவாலயம் வர வாய்ப்பு!


திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் தேறிவரும் நிலையில் தனது இயல்பான பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வயது முதுமையின் காரணமாக தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்துவரும் கருணாநிதி, கடந்த ஓரண்டாக பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்துவருகிறார்.

நோய்த்தொற்று காரணமாக வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்த அவர், கடந்த 19-ஆம் தேதி இரவு முரசொலி அலுவலகத்திற்கு வந்துசென்றார். இந்நிலையில், வழக்கம்போல் தன்னை பார்க்க வருபவர்களை கருணாநிதி சந்திக்க தொடங்கியுள்ளார்.

சீதை பதிப்பகம் சார்பில் திருவாரூர் தொகுதிக்குட்பட்ட 50 பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ள, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை பதிப்பகத்தார் கருணாநிதியிடம் வழங்கினர். விரைவில், கருணாநிதி அண்ணா அறிவாலயம் வரவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.