திங்கள், 30 அக்டோபர், 2017

டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி! October 27, 2017

Image
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, டெல்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோனியா காந்தி, சமீப காலமாக பொது நிகழ்ச்சிகள் மற்றும் கட்சிப் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்து வந்தார். கடைசியாக சில வாரங்களுக்கு முன், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில், ஓய்வுக்காக சிம்லா சென்றிருந்த அவருக்கு, நேன்று திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து வான்வழி ஆம்புலன்ஸ் மூலம், அவர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாக அவரது மகனும், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Posts: