வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

விவசாய போராட்டத்தின் நிலை என்ன?

 


Delhi Farmers protest Tamil News : சில நாட்களுக்குள் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் குறையும் என்ற சில பாஜக தலைவர்களின் கூற்றுகளுக்கு மாறாக, அது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் அதிகரித்துள்ளது. இந்தக் கிளர்ச்சி தொடர்கையில், எளிய விவசாயிகள் கடுமையான ஆர்வலர்களாக மாறியுள்ளனர் மற்றும் விவசாயிகள் தலைவர்களின் உரைகள் மற்றும் இலக்கிய அமைப்புகள் வேளாண் அமைப்புகளால் பரப்பப்படுவதன் மூலம் தொடர்ச்சியான பயிற்சி அமர்வுகளைப் பெறுவதால் ஆர்வலர்கள் உள்ளூர் தலைவர்களை மாற்றியுள்ளனர்.

நடந்துகொண்டிருக்கும் கிளர்ச்சியின் உந்துசக்தி என்ன, விவசாயிகளின் போராட்டத்தை பலவீனப்படுத்த முயற்சி செய்த போதிலும் அவர்களை ஒற்றுமையாக வைத்திருப்பது என்ன என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் விளக்குகிறது.

உழவர் கிளர்ச்சி ஏன் வளர்ந்து வருகிறது?

மத்திய அரசு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளை “நிலமற்றவர்களாக” மாற்றும் என்ற உணர்வு விவசாயிகளிடையே உருவாகியுள்ளது. இது, டெல்லியின் எல்லைகளிலும், பஞ்சாப் மற்றும் ஹரியானா கிராமங்களிலும் கிளர்ச்சி செய்யும் விவசாயிகளிடையே இருக்கும் மிகவும் பொதுவான உணர்வு.

ஆனால், இந்த வேகத்திற்கு உடனடி காரணம் அதிகாரிகள் எடுத்த கடுமையான நிலைப்பாடு, குறிப்பாக டிராக்டர் அணிவகுப்பின் போது டெல்லியில் குடியரசு தின வன்முறைக்குப் பிறகுதான். டெல்லி எல்லைகளில் வரிசையாகப் பதிக்கப்பட்ட இரும்பு ஆணிகள் அதற்கு எதிர்மறையானவை என்பதை நிரூபித்துள்ளன. விவசாயிகள் “தங்கள் குரலை அடக்குவதற்கான முயற்சியை” எடுப்பதைப் போலவே பார்க்கிறார்கள். செங்கோட்டையில் வன்முறை நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு விவசாயிகளை காசிப்பூர் எல்லையிலிருந்து அகற்ற அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி காவல்துறையினரின் பதிப்பைத் தாண்டி விவசாயிகளை சிந்திக்கத் தூண்டியது. “மூவர்ணத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் அவர்களைத் தூண்டுவதற்கு சதி நடந்ததாக” விவசாயிகள் உணர்கிறார்கள். “எங்கள் மகன்கள் நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதுபோல்  தேசியக் கொடி மீது வேறு எவரை விடவும் எங்களுக்கு அதிக மரியாதை உள்ளது” என்று அவர்கள் கூறுகிறார்கள். ஹரியானா காசிப்பூர் எல்லையில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Farmers protest after January 26 Delhi protest Tamil NewsVolunteers during the Chakka Jam in Ludhiana

பரபரப்பை ஏற்படுத்தும் உந்து சக்தி என்ன?

போராட்டத்தின்போது, குறிப்பாகப் பஞ்சாப் விவசாயிகள் ரயில் தடங்களில் அமர்ந்திருந்தபோது, சில ஆர்வலர்களின் படைதான் இப்போது இந்தப் போராட்டத்தின் பின்னணியில் உள்ள இயந்திரம் என்பதை நிரூபித்து வருகிறது. டெல்லி எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தப் பஞ்சாப் கிராமங்களைச் சேர்ந்த அதிகமான விவசாயிகளை அவர்கள் ஊக்குவிக்கின்றனர்.

டெல்லி எல்லைகளில், எதிர்ப்பாளர்களை அவர்கள் ஒழுக்கமாக வைத்திருக்கிறார்கள். “போராட்டத்தின் ஆரம்பத்தில், பஞ்சாபில் உள்ள விவசாய அமைப்புகள் மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றி விவசாயிகளிடம் எல்லாவற்றையும் சொல்ல குர்முகியில் எழுதப்பட்ட லட்சக்கணக்கான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தன. பின்னர், அவர்களின் கேள்விகளுக்குப் பஞ்சாப் கிராமங்களின் ஒவ்வொரு மூலையிலும் சிறிய கூட்டங்களில் பதிலளிக்கப்பட்டது. விவசாயிகள் ரயில் தடங்களில் அமர்ந்திருந்தபோது, படித்த விவசாயி தலைவர்கள் வேளாண் சட்டங்களைப் பற்றி அவர்களிடம் சொன்னார்கள்” என ஓர் மூத்த புலனாய்வு அதிகாரி கூறுகிறார்.

ஹரியானா சாலைகள் வழியாகப் பஞ்சாப் விவசாயிகள் டெல்லி எல்லைகளுக்குச் சென்ற விதம், ஹரியானாவிலிருந்து வந்தவர்களை மிகவும் கவர்ந்தது. ஹரியானா விவசாயிகள் ஏற்கெனவே பண்ணை சட்டங்களைப் பற்றி பயந்தனர். பஞ்சாப் விவசாயிகள் நீண்ட போருக்குத் தயாராக இருப்பதைக் கண்டதும் அவர்களும் பரபரப்பை ஏற்படுத்தினர். டிராக்டர் அணிவகுப்புக்கான அழைப்புக்கு இரு மாநிலங்களிலிருந்தும் எதிர்ப்பாளர்கள் இருந்தனர். ராகேஷ் டிக்கைட் கண்களில் கண்ணீருடன் தோன்றிய காசிப்பூர் அத்தியாயம், விவசாயிகளை மீண்டும் போராட்டத்தில் சேர தூண்டியது. இப்போது, ஒருவர் மட்டுமல்ல, ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த பலரும் போராட்டத்தில் சேர்கின்றனர்.

Farmers during the Kisan Mahapanchayat at Shamli, Uttar PradeshFarmers during the Kisan Mahapanchayat இன்றைய நிலை என்ன?

பல்வேறு சாதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்பது போராட்டத்தை ஒரு வலிமையான சக்தியாக ஆக்கியுள்ளது. இப்போது, “இந்து, முஸ்லீம், சீக்கியர், ஐசாய், ஆபாஸ் மே ஹை பாய்-பாய் (இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் சகோதரர்கள்) என்ற முழக்கங்கள் கிசான் மகாபஞ்சாயத்துகளின் கட்டங்களிலிருந்து எழுப்பப்படுகின்றன. மேவாட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகாபஞ்சாயத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். “யமுனா நகருக்கு அருகிலுள்ள ஒரு டோல் பிளாசாவில், விவசாய சகோதரர்கள் கிளர்ச்சியூட்டும் விவசாயிகளுக்கு உணவு வழங்குகிறார்கள்” என்று பி.கே.யூ தலைவர் சுபாஷ் குஜ்ஜார் கூறுகிறார். “இது எல்லோரும் பங்களிக்க விரும்பும் ஒரு தர்ம யுத்தம். உழவர் போராட்டம் தொடர்கையில், ஒவ்வொரு நாளும், புதிய விவசாயிகள் போராட்டத்தில் சேர்கின்றனர்” என்று குஜ்ஜார் மேலும் கூறினார்.

இதேபோன்ற உணர்வுகளை எதிரொலிக்கும் மற்றொரு பி.கே.யூ தலைவர் சஞ்சு குடியானா, “செவ்வாயன்று விவசாயிகளுக்கு ஆதரவாகப் பலர் யமுனா நகரில் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்” என்றார். ஏறக்குறைய அனைத்து விவசாய சங்கங்களும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் போராட்டத்தை ஆதரிக்கின்றன. அவை வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமையைக் கொண்டுள்ளன. “இது உண்மையில் சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவின் வரலாற்றின் தனித்துவமான வெகுஜன இயக்கம்” என வரலாற்றாசிரியர் எம் எம் ஜுனேஜா கூறுகிறார்.

source https://tamil.indianexpress.com/explained/farmers-protest-after-january-26-delhi-protest-tamil-news-246746/