வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது

 நபிகள் நாயகம் குறித்து அவதூராக பேசிய பாஜக பிரமுகர் கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக சார்பில் கோவை மேட்டுப்பாளையத்தில் கடந்தஜனவரிந 31-ந் தேதி டைபெற்ற ஆர்பாட்டத்தில், கலந்துகொண்ட சென்னையை சேர்த்த பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இஸ்லாமியர்களின் புனிதரான நபிகள் நாயகம் குறித்து அவதூராக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் கொடுத்த புகாரின் பேரில், கடந்த ஜனவரி 31-ந் தேதி கல்யாணராமன் மற்றும் மேட்டுப்பாளையம் காட்டூரை சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டார்.

ஆனால் இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி இருவரும் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.  இதனையடுத்து கோவை அவினாசி சிலையில் அமைக்கப்பட்டுள்ள கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனுமதி அளிக்குமாறு கோவை எஸ்பி பரிந்துறை செய்த்தை தொடர்ந்து, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


இதனையடுத்து சிறையில் இருக்கும் கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

source : https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-political-news-bjp-leader-kalyanaraman-arresred-goondas-law-247008/