ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

வெளிநாட்டில் வசிக்கும் தமிழரா? உங்களுக்கான தமிழக அரசின் அறிவிப்பு

 24 09 2022

வெளிநாட்டில் வசிக்கும் தமிழரா? உங்களுக்கான தமிழக அரசின் அறிவிப்பு

Tamil Nadu News: 2015ஆம் ஆண்டில் 28 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்துகொண்டு இருந்தனர், தற்போது அந்த எண்ணிக்கை  2-3 கோடியாக உயர்ந்துள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டு காலகட்டத்தில் 28 லட்சத்தில் இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 2-3 கோடியாக உயர்ந்துள்ளதால், அவர்களின் நலனை உறுதி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் இதைப்பற்றின தகவல்களை குடியுரிமை இல்லாத தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மத்திய கிழக்கிற்கு புலம் பெயர்ந்த இந்தியர்களுக்கான நியாயமான ஆட்சேர்ப்பு செயல்முறை மற்றும் புறப்படுவதற்கு முந்தைய நடைமுறைகள் குறித்த மாநில அளவிலான ஆலோசனை கூட்டத்தில் ஜெசிந்தா லாசரஸ் கூறினார். 

மேலும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் சிறப்பு மையத்தை தொடங்கியுள்ளது என்றும், பொதுமக்கள் இந்த சேவைகளைப் பெறலாம் என்றும் கூறினார்.

“வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை, இதனால் நெருக்கடியான காலங்களில் அவர்களுக்கு உதவுவது கடினமாக உள்ளது.

ஆகையால், வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் அனைவரும் தமிழ்நாடு நல வாரியத்தில் தங்கள் முகவரியை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இளைஞர்கள் விண்ணப்பிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். 

வேலை வாய்ப்பு என, சமூக வலைதளங்களில் பல போலியான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் உலா வருகின்றன. மேலும், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்புபவர்களுக்கு தொழில் கடன் வழங்கும் சிறப்பு திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்,” என்று லாசரஸ் தெரிவித்தார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/population-of-tamil-people-working-abroad-has-been-increased-to-crores-515522/

Related Posts:

  • கண்டங்கத்திரி குப்பை மேட்டிலும் குவிந்து கிடக்குது மருத்துவம்: காய்ச்சலை விரட்டும் கண்டங்கத்திரி பாட்டுக்கு அழகு கூட்டத்தைக் கூட்டுவது; மருந்துக்கு அழகு நோய… Read More
  • யார் உண்மையான தீவிரவாதி நண்பர்களே முடிந்தவரை இந்த படத்தை சேர் செய்யவும்..உலகம் உணரட்டும் யார் உண்மையான தீவிரவாதி என்று!! … Read More
  • மன அழுத்தம் நாட்டின், மொத்த மக்கள் தொகையில், 10 சதவீதம் பேருக்கு மனநோய் அல்லது மனஅழுத்தம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம் என்பது ஒர… Read More
  • தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து! உடல் தட்பவெப்பநிலையின் சமநிலை குலைந்து வெப்பம் அதிகரிப்பதை காய்ச்சல் என்கிறோம். காய்ச்சலில் பல வகைகள் இருக்கின்றன. பெரும்பாலானவை கிருமிகள் … Read More
  • வெடிக்காத குண்டுகளை - பூச்செண்டு! இஸ்ரேலின் வெடிக்காத குண்டுகளை எடுத்து செயலிழப்பு செய்து அதில் பூச்செண்டு! பூச்செடிகளை தயாரிக்கும் பாலஸ்தீன அன்னை ஹீமைரா. இந்த முதிய வயத… Read More