வியாழன், 29 செப்டம்பர், 2022

பி.எஃப்.ஐ உள்பட 8 அமைப்புகளுக்கு தடை.. கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

 

28 09 2022

பி.எஃப்.ஐ உள்பட 8 அமைப்புகளுக்கு தடை.. கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

PFI  மற்றும் அதன் துணை அமைப்புகளான SDBI உட்பட 8 அமைப்புகள் தடை செய்யப்பட்டதை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் அந்த  அமைப்புகளை சேர்ந்த பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் PFI மற்றும் அதன் துணை அமைப்புக்கான SDBI உள்ளிட்ட 8 அமைப்புகள் அடுத்த 5 ஆண்டுகள் செயல்பட மத்திய அரசு தடைவீடு உள்ளது. இந்தத் தடை உத்தரவு இன்று (செப்.28) முதல் அமலுக்கு வருகிறது.\

இந்த நிலையில்   கோவை உக்கடம் பகுதியில் உள்ள PFI – SDBI அலுவலகங்கள் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். உக்கடம் பேருந்து நிலையம், டவுன்ஹால்  உட்பட நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளன.

இந்நிலையில் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பாக மத்திய அரசை கண்டத்து ஆர்ப்பாட்டம் நடத்த PFI – SDBI அமைப்பினை சேர்ந்த பெண்கள் திரண்டனர். PFI – SDBI அமைப்புகளை சேர்ந்த இஸ்லாமிய பெண்களை ஒலிபெருக்கி மூலம்  காவல் துறையினர் எச்சரித்தனர். அமைப்பு தடைசெய்யப்பட்டு இருக்கும் நிலையில் போராட்டம் நடத்தினால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறி போராட்டத்திற்கு வந்த பெண்களை போலீசார் எச்சரித்தனர்.

அப்பொழுது அவர்கள் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பிய படி தெற்கு உக்கடம்  பகுதியில் சிறிய தூரம் ஊர்வலமாக சென்றனர். அவர்களை காவல் துறை சமரசப்படுத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைத்து சென்றனர்.

இதனிடையே உக்கடம், ஆத்துப்பாலம் உட்பட நகரின் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.

செய்தியாளர் பி.ரஹ்மான்

source https://tamil.indianexpress.com/tamilnadu/demonstration-in-coimbatore-against-pfi-ban-517473/