திங்கள், 27 ஏப்ரல், 2026

பொள்ளாச்சி இளநீர் ஏற்றுமதியில் கடும் பாதிப்பு

 

pollachi Coconut

ஈரான்-இஸ்ரேல் மோதலால் ஏற்பட்டுள்ள சரக்குக் கட்டண உயர்வு மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்பு காரணமாக இந்தியாவின் முக்கிய மையங்களில் ஒன்றான பொள்ளாச்சியிலிருந்து நடைபெறும் இளநீர் ஏற்றுமதி, கடந்த இரண்டு மாதங்களாகத் தற்காலிகமாக முடங்கியுள்ளது.

இது குறித்து டிடி நெக்ஸ்ட் வெளியிட்டுள்ள தகவலின்படி, கப்பல் போக்குவரத்து செலவு திடீரென அதிகரித்துள்ளதாலும், தளவாட ரீதியான நிச்சயமற்ற தன்மையாலும் வெளிநாட்டு வர்த்தகம் சாத்தியமற்றதாக மாறியுள்ளது. சர்வதேச அளவில் தேவை நிலையாக இருந்தபோதிலும், கட்டண உயர்வு காரணமாக வேறு வழியின்றி ஆர்டர்களை ரத்து செய்யும் ஏற்படுவதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். .

சரக்கு அனுப்புவதற்கான கப்பல் கட்டணம் ஒரே மாதத்தில் 1.60 லட்சம் ரூபாயிலிருந்து 4.50 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். இதனால் லண்டனுக்கு அனுப்பப்படும் 25 டன் இளநீர், ஆர்டர் நிறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இன்னும் ஆர்டர்களை வழங்குகிறார்கள், ஆனால் தற்போதைய சூழலில் அவர்கள் டெலிவரிக்கு பிறகு பணம் செலுத்த விரும்புகிறார்கள். ஆனால் அந்த ரிஸ்க்கை எங்களால் எடுக்க முடியாது என்பதால் பல ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

முக்கிய கடல் வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் இந்த நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. சூயஸ் கால்வாய் வழியாக லண்டனை அடைய பொதுவாக 18 நாட்கள் ஆகும், ஆனால் இப்போது தாமதமாகிறது. மாற்று வழிகளில் செல்லும்போது பயண நேரம் ஒரு மாதம் வரை நீடிக்கிறது. அதேபோல், துபாய்க்கு ஒரு வாரத்தில் சென்ற சரக்குகள், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றம் காரணமாக இப்போது பயண நாள் 15 நாட்களுக்கு மேலாகின்றன.

இதன் விளைவாக, சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கான ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. லண்டன், ஜெர்மனி, மொரிஷியஸ், ஜப்பான், கென்யா, ஈரான், கனடா மற்றும் சிங்கப்பூர் போன்ற முக்கிய சந்தைகளுக்கான ஏற்றுமதியும் முடங்கியுள்ளது. "துபாயில் இருந்து ஏற்றுமதி குறித்து விசாரித்து வந்தாலும், கடந்த இரண்டு மாதங்களாக ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது," என்று கூறியுள்ளனர்.

அதே சமயம் தேர்தல் தொடர்பான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததால் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடை, உரித்தல், பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது, இளநீரின் ஆயுட்காலம் ஒரு வாரம் மட்டுமே என்பதால், போக்குவரத்து தாமதம் அதன் தரத்தை வெகுவாகப் பாதிக்கிறது.
போருக்குப் பிறகு உரங்களின் விலை உயர்ந்துள்ளது, தொழிலாளர் பற்றாக்குறையும் நீடிக்கிறது. இதனால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது," ஏற்றுமதி சரிந்தாலும், உள்நாட்டுத் தேவை வலுவாக இருப்பது விவசாயிகளுக்குச் சற்று ஆறுதலாக உள்ளது என்று ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் முதன்மையான இளநீர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக பொள்ளாச்சி இருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 86,800 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. இளநீரின் உச்சக்கட்ட சீசன் மார்ச் முதல் ஜூன் பாதியளவு வரை ஆகும். பொள்ளாச்சி இளநீர் அதன் இனிப்புச் சுவை மற்றும் அதிக நீர்ச்சத்திற்குப் பெயர் பெற்றது. இளநீர் பண்ணை விலை ரூ. 49 ஆகவும், சில்லறை விற்பனை விலை ரூ. 60 மற்றும் அதற்கு மேலாகவும் உள்ளது.

வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோய் மற்றும் நீண்ட வறட்சி காரணமாக மகசூல் 25% வரை குறைந்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறை, உர விலை உயர்வு. வளைகுடா நாடுகள், லண்டன், ஜெர்மனி, மொரிஷியஸ், ஜப்பான், கென்யா, ஈரான், கனடா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி நிறுத்தம். மாற்று கடல் வழித்தடங்களால் பயண நேரம் ஒரு மாதம் வரை நீடிக்கிறது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-pollachi-coconut-export-impact-for-gulf-crisis-ocean-freight-rates-triple-11769418