/indian-express-tamil/media/media_files/2026/04/25/malaikkottai-2026-04-25-20-54-55.jpg)
திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் சுற்றியுள்ள ஆக்கிரப்புகளை அகற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தெப்பக்குளம் அருகே உள்ள பர்மா பஜார் கடைகளை சிங்காரத்தோப்பில் புதிய இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக அங்கு இருந்த 70 க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. பிறகு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியதை தொடர்ந்து மீதமுள்ள 20க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்படாமல் அப்படியே செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் தேர்தல் முடிந்ததை தொடர்ந்து இன்று திருச்சி கோட்டை போலீசார் உதவியுடன், மாநகராட்சி நிர்வாகத்தினர் மலைக்கோட்டை தெப்பக்குளம் பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பர்மா பஜார் கடைகளை அகற்றினர்.
ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகம் வியாபாரிகளுக்கு போதிய அவகாசம் கொடுத்த நிலையில் கடைகள் அகற்றப்படாததால் தேர்தல் முடிந்த கையோடு இன்று கடைகளை அகற்றியது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-trichy-malaikkottai-shops-and-building-update-in-tamil-11766034





