பாசிச முகம் மறைக்கப்பட்டாலும்…
அதுக்குள்ள இருக்கிற உண்மை மறையாது!
பாரதிய ஜனதா கட்சி – பெயர் மட்டும் மாறலாம்…
ஆனா செயல் மாறல!
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – என்பது பாஜகவின் முகத்திரை மாத்திரம்!
“பாஜக வந்துடும்”ன்னு சொல்வது பூச்சாண்டி கதையில்லை…
நடந்த வரலாறு தான்… நினைவில் இருக்க வேண்டிய உண்மை!
பல்கிஸ் பானு வழக்கு – நீதிக்கு கேள்விக்குறி!
கோத்ரா ரயில் எரிப்பு – தீயின் தொடக்கம்!
குஜராத் கலவரம் – மனிதத்தன்மையின் அழிவு!
இது எல்லாம் கதையில்லை…
இது நடந்த உண்மை!
இப்போ தமிழகத்துலவும்…
திருப்பரங்குன்றம் மாதிரி இடங்களில்
அதே விதமான அரசியல் நடக்குது!
புறக்கணிப்போம் பாஜக கும்பலை...
இன்னொரு கும்பல் சுத்துது ஒருமுறை மட்டும் ஓட்டு போடுங்க என்று சொல்லி சுற்றும் கும்பலை நம்புவது சாதாரண விஷயம் இல்லை — அது ஒரு வலை.
ஒரு வாக்கு என்பது ஒரு நாளுக்கான முடிவு இல்லை…
அது ஐந்து ஆண்டுகளுக்கான உங்கள் வாழ்க்கை, உங்கள் குடும்பம், உங்கள் உரிமைகள் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தி.
“ஒரு முறை மட்டும்” என்று கேட்பவர்கள்,
அந்த ஒரு முறைக்குப் பிறகு உங்களை நினைப்பார்களா?
உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு தருவார்களா?
அல்லது மறுபடியும் அடுத்த தேர்தல் வரைக்கும் காணாமல் போய்விடுவார்களா?
வாக்கு என்பது பரிசு இல்லை — பொறுப்பு.
அதை யாரோ சொன்னதற்காக போடக்கூடாது.
யார் உங்களுக்கு வேலை செய்திருக்கிறார்கள்,
யார் உங்கள் பகுதியை முன்னேற்றியிருக்கிறார்கள்,
யார் உண்மையாக உங்கள் பக்கம் நிற்கிறார்கள் — அதை பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும்.
“ஒரு முறை மட்டும்” என்று சொல்வது,
உங்களை ஒரு முறை ஏமாற்றுவதற்கான திட்டம் தான்.
25 4 2026
ஆகையால்,
அந்த மாதிரி வார்த்தைகளுக்கு மயங்காதீர்கள்.
உங்கள் வாக்கை யோசித்து பயன்படுத்துங்கள்.
ஏமாற்றத்துக்கு வாக்கு போடாதீர்கள்.
ஓட்டுகேட்டு நமது வீடுகளுக்கு வரதவர்கள் எப்படி நம் குறைகளை கேட்க, தீர்க்க போகிறார்கள் சிந்தியுங்கள்..





