புதன், 30 ஜூன், 2021

ஏ.கே.ராஜன் குழுவுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதியை தமிழக அரசு பெற்றதா? ஐகோர்ட் கேள்வி

 நீட் தேர்வு தாக்கங்கள் குறித்த ஆராய குழு அமைத்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.தமிழகத்தில் நீட் தேர்வு அரசுப் பள்ளி மாணவர்கள், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.நீட் தேர்வால் பாதிப்பு என்றால்,...

கூடங்குளம் அணுமின் திட்டம் : 5 மற்றும் 6-வது யூனிட் கட்டுமான பணிகள் தொடக்கம்

 Kudankulam Nuclear Power Project Tamil News : திருநெல்வேலி குடங்குளம் அணுமின் திட்டத்தில் (கே.கே.என்.பி.பி) 2000 மெகாவாட் (2 எக்ஸ் 1000) யூனிட் 5 மற்றும் 6 இன் கட்டுமானப்பணிகள் ‘கான்கிரீட் முதல் ஊற்றலுடன்’ முதற்கட்ட பணிகள் இன்று (ஜூன் 29) தொடங்கியது. அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், அணுசக்தித் துறையின் செயலாளருமான கமலேஷ் நீல்காந்த் வியாஸ் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம்...

காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்க்கு புதிய பதவி : தமிழக அரசு அறிவிப்பு

 29 06 2021 Tamilnadu Minorities Commission New Chairman : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பீட்டர் அல்போன்ஸ் தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளர்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின்...

மாட்டிறைச்சி விற்பனைக்கு தடைவிதித்த வட்டாட்சியர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

 29/05/2021 திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று மிரட்டிய வட்டாட்சியரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, அந்த வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்துள்ளது.இந்தியாவில் 2015ம் ஆண்டு டெல்லி அருகே தாத்ரி சம்பவத்துக்குப் பிறகு, மாட்டிறைச்சி தொடர்பான தாக்குதல்கள் மற்றும் வன்முறை...

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம்

 30 06 2021 தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இவர் தமிழ்நாட்டின் 30வது டிஜிபியாக ஜூலை 1ம் தேதி பதவியேற்கிறார்.தமிழ்நாட்டில் தற்போது டிஜிபியாக உள்ள ஜே.கே.திரிபாதியின் பணி காலம் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதனால், புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. தமிழ்நாடு காவல் பணியில்...

செவ்வாய், 29 ஜூன், 2021

அழிவின் விளிம்பில் இருக்கும் கானமயில்,

 Source: Gujarat Forest DepartmentGreat Indian Bustard habitat loss : 2004 – 2014 காலங்களில் ராஜீவ் காந்தி க்ரமீன் வித்யுதிகரன் யோஜனா (Rajiv Gandhi Grameen Vidyutikaran Yojana) என்ற பெயரில் இந்தியாவின் கடைகோடி கிராமங்களுக்கும் மின்சாரம் வழ்ங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தீன் தயாள் உபாத்யாய கிராம ஜோதி யோஜனா (Deen Dayal Upadhyay Gram Jyoti Yojana) என்ற திட்டத்தின்...

தமிழக புதிய டிஜிபி யார்? டெல்லியில் முக்கிய ஆலோசனை

 தமிழ்நாட்டின் டிஜிபி ஜே.கே.திரிபாதியின் பணி காலம் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் புதிய டிஜிபியை முடிவு செய்வதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மாநில தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர்.தமிழ்நாடு தலைமை டிஜிபியாக உள்ள ஜே.கே.திரிபாதியின் பணி காலம் ஜூன் 30ம்...

3 எம்பி பதவிகளுக்கு ராஜ்யசபா இடைத்தேர்தல்: ஒரு இடம் கேட்கும் காங்கிரஸ்

 Rajya Sabha By Election Update Tamilnadu : மாநிலங்களவையில் காலியாக உள்ள தமிழகத்திற்காக 3 இடங்களுக்கு இடைத்தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த 3 இடங்களையும் கைப்பற்றும் முயற்சியில் திமுக களமிறங்கியுள்ளது.மாநிலங்களவையில் எம்பியாக இருந்த அதிமுகவை சேர்ந்த ஏ முகமது ஜான் மார்ச் 23 அன்று மரணமடைந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  கே.பி.முனுசாமி...

இணைய அறிவுசார் சொத்துகளை பாதுகாக்கும் டி.எம்.சி.ஏ சட்டம் என்றால் என்ன?

 28 06 2021 protection of intellectual property online : டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டத்தை (டி.எம்.சி.ஏ) (Digital Millennium Copyright Act (DMCA)) மீறியதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கு ஒரு மணி நேரத்திற்கு முடக்கப்பட்டது. உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) உறுப்பு நாடுகளால் கையெழுத்திடப்பட்ட இரண்டு 1996 ஒப்பந்தங்களை அமல்படுத்துவதை...

உணவு பொருட்களின் விலை அதிகரிக்குமா?

28 06 2021  பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் பீப்பாய் ஒன்றுக்கு 75 டாலராக அதிகரித்து வெள்ளிக்கிழமை 76.18 டாலராக முடிவடைந்தது. இது 29 அக்டோபர் 2018 முதல் பார்க்கும்போது மிகவும் அதிகரித்த விலையாகும். ப்ரெண்ட் ஒரு வருடத்திற்கு முன்பு பீப்பாய்க்கு ஒன்றுக்கு 41 டாலருக்கு மேல் வர்த்தகம் ஆனது. இந்திய நுகர்வோருக்கு முழுமையாக அனுப்பப்படுகிறது. எரிபொருள் விலை உயர்வால்...

திங்கள், 28 ஜூன், 2021

பாளையங்கோட்டை ஜெயில் கைதி கொலை: 60 நாட்களை கடந்தும் உடலை வாங்க மறுத்து போராட்டம்

 பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்த முத்துமனோ (27) சிறைக் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலில் ஏப்ரல் 22ம் தேதி அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில், தெவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இயக்கங்கள் மற்றும் பாஜக உள்ளிட்ட...

புது வகையான தாக்குதல்; ஜம்மு விமானப்படை தளத்தில் வீசப்பட்ட 2 வெடிகுண்டுகள்

28.06.2021  Indian Air Force base in Jammu : ஞாயிற்று கிழமை காலை ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ட்ரோன் மூலம் இரண்டு வெடிகுண்டுகள் கீழே போடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இது போன்று தாக்குதல் நடைபெறுவது இதுவே முதல்முறை.அதிகாலை 1.37 மற்றும் 1.42 மணி அளவில் இரண்டு வெடிகுண்டுகள் இவ்வாறு போடப்பட்டு தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு விமானப்படை அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர்.ஒரு கட்டிடத்தின் மேற்கூரை...

உயர்நீதிமன்றத்திற்கு உதயநிதி வைத்த முக்கிய கோரிக்கை

 வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை பார் கவுன்சில் வளாகத்தில்  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி இன்று தொடங்கிவைத்தார். நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய தலைமை...

ஞாயிறு, 27 ஜூன், 2021

தடுப்பூசிகளை வீணடிக்கும் தனியார் மருத்துவமனைகள்: கூடுதலாக ஒதுக்க மத்திய அரசு மறுப்பு

  இந்தியாவில் உருவெடுத்துள்ள கொரோனா 2ம் அலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் துவங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த தடுப்பூசி திட்டத்தின் கீழ் மே மற்றும் ஜூன் மாதங்களில் (ஜூன் 23 வரை) தமிழ்நாட்டின் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்ட 8 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் குளிர் சேமிப்பில் பயன்படுத்தப்படாமல்...

ஜெய் ஹிந்த் பேச்சு சரியா? ஈஸ்வரனுக்கு காங்கிரசும் எதிர்ப்பு

 inw)Kongu Eswaran Jaihind Issue : 26 06 2021 தமிழக சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்த கொங்கு ஈஸ்வரன்,ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம் பெறாதது, தமிழகம் தலைநிமிர்ந்துவிட்டதற்கான அடையாளம் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 21-ந் தேதி தொடங்கியது. 24-ந் தேதி வரை நடைபெற்ற இந்த கூட்டத்தில், முதல்நாளில்...

சனி, 26 ஜூன், 2021

புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிப்பு

 25 06 2021 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கிய நிலையில், ஊரடங்கு உத்தரவிலும் தள்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் இம்மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவு 3 முறை நீடிக்கப்பட்டு வரும் 28-ந் தேதி காலை 6 வரை அமல்படுத்தப்பட்டது.இதில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தளர்வுகளுடன்...

கொரோனா தீண்டாத தமிழகத்தின் பழங்குடியினர் கிராமம்

 25 06 2021 கடந்த ஆண்டின் துவக்க மாதங்களில் இந்தியா முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா தொற்று நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொடிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் நீட்சியாக தற்போது உருவெடுத்துள்ள கொரோனா 2ம் அலையும் நாட்டின் முக்கிய பகுதிகளில் பரவி வலி மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த பெருந்தொற்று அச்சத்திலிருந்து தமிழகத்தின் சில குக் கிராமங்கள் தங்களை தாங்களே...