திங்கள், 21 ஜூன், 2021

தமிழ்நாட்டில் வரும் 28-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு: முதலைமைச்சர்

 20/06/2021 இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் தற்போதுள்ள சில தளர்வுகளுடன் உள்ள ஊரடங்கை வரும் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும் மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில் ஊரடங்கு தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வு வகை 1, வகை 2 மற்றும் வகை 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றுள்ள வகை 1-ல் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்கள் உள்ளது.

இந்த 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்த செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்துள்ள வகை 3-ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த 4 மாவட்டங்களில் கீழ்கண்ட கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

  • மளிகை, பலசரக்குள், காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை, கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை இயங்க அனுமதி.
  • காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனைச் செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை இயங்கலாம்.
  • உணவகங்கள் மற்றும் அடுமனைகள் மற்றும் மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 9 மணிவரை செயல்படலாம்.
  • மின் வணிக சேவை நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு9 மணிவர இயங்கலாம்.
  • அரசு அலுவலகங்கள் 100 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
  • சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்கலாம்.
  • தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும்.
  • காலணி விற்பனைச் செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்படலாம்.
  • வாகனங்கள் விற்பனைச் செய்யும் நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை அனுமதி.
  • பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ, வீடியோ கடைகள், சலவை கடைகள், தையல் கடைகள், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்படலாம்.
  • தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.
  • செல்போன் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7மணி வரை செயல்பட அனுமதி.
  • சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை.
  • அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர் சாதனை வசதி இல்லாமல் ஒரே நேரத்தில் 50 % வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம்.
  • திரைப்படம் மற்றும் சின்னதிரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதி.
  • வகை மூன்றில் வரும் 4 மாவட்டத்திற்குள் மட்டும் பொது பேருந்து போக்குவரத்து குளிர் சாதன வசதி இல்லாமல் 50 % பயணிகளுடன் இயங்க அனுமதி.
  • மெட்ரோ ரயில் போக்குவரத்து 50 % பயணிகளுடன் இயங்கலாம்.
  • வாடகை வாகனங்கள், டேக்ஸி மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவில்லாமல் செல்ல அனுமதி

    வகை 2-ல் வரும் 23 மாவட்டங்களில் எதற்கெல்லாம் அனுமதி!

கொரோனா ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ள வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் விவரம்.

  • அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், மற்றும் விருதுநகர்.
  • மளிகை, பலசரக்குள், காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை, கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை இயங்க அனுமதி.
  • காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனைச் செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை இயங்கலாம்.
  • உணவகங்கள் மற்றும் அடுமனைகள் மற்றும் மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 9 மணிவரை செயல்படலாம்.
  • அரசின் அத்தியாவசியத் துறை அலுவலகங்கள் 100 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. இதர அரசு அலுவலகங்கள் 50 % பணியாளர்களுடன் செயல்படலாம்.
  • சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்கலாம்.
  • தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும்.
  • மின்பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படலாம்.
  • மிதிவண்டி, இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டும் செயல்பட அனுமதி.
  • ஹார்டுவேர் கடைகள் காலை 9 மணி முதல் 5 மணி வரை செயல்பட இயங்கலாம்.
  • கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை இயங்கலாம்.
  • வாகன வினியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி.
  • மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படலாம்.
  • மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல், விற்பனை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
  • அனைத்து வகையான கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி.
  • பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிருவாக பணிகளுக்கு மட்டும் அனுமதி.
  • திரையரங்குகளில் தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒருநாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
  • விளையாட்டு பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் செயல்படக் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.
  • வாடகை டேக்ஸிகள், ஆட்டோக்களின் பயணிகள் இ- பதிவுடன் செல்ல அனுமதி.
source https://news7tamil.live/tn-lock-down-corona-phase-1-district-cm-stalin.html