வெள்ளி, 23 டிசம்பர், 2022

பொங்கல் பரிசாக ரூ 1000 ரொக்கம், அரிசி, சர்க்கரை: தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு

 22 12 2022

பொங்கல் பரிசாக ரூ 1000 ரொக்கம், அரிசி, சர்க்கரை: தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுக்களுக்கு பொங்கல் பொருட்களுடன் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகை குறித்து தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்ப அட்டைதரார்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ 1000 ரொக்கமும், பொங்கல் பொருட்களான அரிசி சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2023-ம் ஆண்டு தை பொங்கலை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ1000, ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கிட முதல்வர் ஆணை வெளியிட்டுள்ளார்.

2023-ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் 2023-ம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ1000 ரொக்கம் வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ 2,356.67 கோடி செலவினம் ஏற்படும்.

தமிழக முதல்வர் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை ஜனவரி 2-ந்’ தேதி சென்னையிலும் அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-government-announces-pongal-gift-to-people-563236/