புதன், 18 ஜனவரி, 2023

விமானத்தில் அவசரகால கதவை திறந்த பிரச்னை: 2 முக்கிய தலைவர்களிடம் விசாரணை?

 17 1 23


விமானத்தில் அவசரகால கதவை திறந்த பிரச்னை: 2 முக்கிய தலைவர்களிடம் விசாரணை?

விமானத்தில் அவசரகால கதவை திறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது விமானத்தில் பயணம் செய்த தேசியக் கட்சியைச் சேர்ந்த 2 முக்கிய தலைவர்கள் இதில் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர்களிடம் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி திருச்சியில் விமானத்தில் பயணம் செய்த தலைவர்கள் 2 பேர் விமானத்தின் அவசர கதவை திறந்ததாக செய்திகள் வெளியாகி சர்ச்சையானது.

இந்நிலையில், திருச்சியில் டிசம்பர் 10-ம் தேதி இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தபோது, விமானத்தின் அவசர கால கதவை திறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமான போக்குரவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 2 முக்கிய தலைவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்பது தெரியவந்துள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/flight-emergency-door-opened-issue-airport-authority-ministry-order-to-inquiry-at-two-leaders-577874/