செவ்வாய், 8 மார்ச், 2016

தேவாலயத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய 9 பஜ்ரங்தள் அமைப்பினர் கைது


church_attackசத்தீஸ்கரில் தேவாலயத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய 9 பஜ்ரங்தள்(BJP) அமைப்பினரை அம்மாநில போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் அருகே காஷ்னா கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் தேவாலயத்தில் புகுந்த 15 பேர் கொண்ட  கும்பல், தேவாலயத்தை அடித்து நொறுக்கியதுடன் அங்கிருந்தப் பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தினர். 

இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 5 வாரங்களில் நடந்த 4 வது தாக்குதல் இதுவாகும்.போலீசார் நடத்திய  விசாரணையில், பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக 9 பேரை  கைது செய்து போலீசார், 3 இருசக்கர வாகனங்களையும் பறி முதல் செய்தனர்.

Related Posts: