Home »
» கொடூரத்தின் உச்சம் உளவு வேலையில் ஈடுபட்டவர்களை கழுத்தில் வெடிகுண்டை கட்டி வெடிக்க செய்த ஐ.எஸ் தீவிரவாதிகள்,
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய நாடாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆட்சி செய்து வருகின்றனர். உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள், தங்களுக்கு எதிராக உளவு வேலையில் ஈடுபடுபவர்களை கொடூரமான முறையில் கொலை செய்து வருகின்றனர்.இந்நிலையில் ஈராக் அரசாங்கத்துக்காக தங்கள் அமைப்பை உளவு பார்த்த 6 பேரை கொலை செய்யும் வீடியோவை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் கழுத்தில் வெடிகுண்டு இணைக்கப்பட்ட கம்பியின் மூலம் முடிச்சு போடும் தீவிரவாதிகள் வெடிக்குண்டை வெடிக்க செய்து கொலை செய்துள்ளனர்.அடுத்ததாக அவர்களின் பிடியில் உள்ள இரண்டு போலீசாரை தலையில் சுட்டுக்கொலை செய்கின்ற காட்சிகளும் அந்த வீடியோவில் அடங்கியுள்ளன.தங்கள் இயக்கத்தில் உள்ளவர்கள் பெயர்கள் மற்றும் விபரங்களை கசியவிட்ட குற்றம், அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டது போன்ற குற்றங்களுக்காக அந்த ஆறு பேரையும் கொன்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக தங்கள் இயக்கத்தை உளவு பார்த்ததாக 3 பேரை இம்மாதத்தின் தொடக்கத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் படுகொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
Related Posts:
மசினகுடி வலசை பாதை : யானைகளுக்கு இருக்கும் அங்கீகாரமும் உரிமையும் மனிதர்களுக்கு இல்லையா? மசினகுடி என்றவுடன் பலருக்கும் நினைவிற்கு வருவது யானைகளும் ரிசார்ட்களும் தான். அரசு உத்தரவை மீறி, வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளை ஆக்கிரமித்து வீட… Read More
தொடரும் விவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தை முடங்கியது எப்படி? How talks froze: Centre says we yielded, farmers insist repeal always key demand : செப்டம்பர் 30ம் தேதி அன்று சர்ச்சைக்குரிய வகையில் மாநில… Read More
முஸ்லிம்களின் உடல்களை மத நம்பிக்கைக்கு எதிராக தகனம்: இலங்கையில் சர்ச்சை இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 19 முஸ்லிம்களின் சடலங்களை சர்ச்சைக்குரிய வகையில் முஸ்லிம்களின் மத நம்பிக்கைக்கு எதிராக அவர்கள… Read More
இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவை கூகுள் இந்தியா தனது வருடாந்திர ‘தேடல்’ முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், செய்தி, விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் அதற்கும் மேற்பட்ட அனைத்து தனித… Read More
கோவையில் பறவைகள், பட்டாம்பூச்சிகள் சர்வே நாளை துவக்கம்! Coimbatore forest division Birds and butterflies survey starts from dec 12 Coimbatore News : தமிழக வனத்துறை சார்பில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. பறவைகள், பூச்சியினங்கள் ஆகியவற்றின் செரிவை அறிய அடிக்கடி சர்வேக்கள் நடத்தப்படுவது வழக்கம். சமீபத்தில் சத்தியமங்கலம் காடுகளில் பறவைகள் சர்வே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிசம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் கோவையில் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் சர்வே நடைபெற உள்ளது. இன்று நடைபெற உள்ள சர்வே அறிமுக விழாவில் சிறுவாணி மலைப்பகுதிகளில் இருக்கும் பட்டாம்பூச்சிகள் குறித்து ஆய்வு அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க : தமிழக பட்டாம்பூச்சிகளுக்கு செறிவான உறைவிடமாக இருக்கும் கோவை! Coimbatore forest division Birds and butterflies survey starts from dec 12 கோவை வனத்துறையினருடன், தி நேச்சர் அண்ட் பட்டர்ஃப்ளை சொசைட்டி, WWF, மற்றும் கோயம்புத்தூர் நேச்சர் சொசைட்டி அமைப்புகள் இணைந்து இந்த கணக்கெடுப்பினை நடத்த உள்ளனர். கோவையை சுற்றி அமைந்திருக்கும் இயற்கை எழில் சூழந்த பகுதிகளை இருப்பிடமாக கொண்டுள்ள பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் குறித்து அறிந்து கொள்ள இது பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Coimbatore News : தமிழக வனத்துறை சார்பில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. பறவைகள், பூச்சியினங்கள் ஆகியவற்றின் செரிவை அறிய அடிக்கடி ச… Read More