சனி, 22 ஏப்ரல், 2017

மே 13-ம் தேதி மூன்றாம் உலகப்போர் தொடங்கும்

சர்வதேச நாடுகளை பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் மூன்றாம் உலகப்போர் எதிர்வரும் மே 13-ம் தேதி தொடங்கும் என வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே சரியாக கணித்து கூறுவதில் பிரபலமானவர் நாஸ்டர்டாமஸ்.2017-ம் ஆண்டு தொடங்கி மூன்றாம் உலகப்போர் உலகை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் எனக் கணித்தார்.
இவரை தொடர்ந்து பாபா வாங்கா என்ற மூதாட்டி மூன்றாம் உலகப்போர் 2016 முதலே தொடங்கி விடும் என கணித்துக் கூறினார்.தற்போது இவர்களை தொடர்ந்து  க்ளேர்வாயோன் ஹொரசியோ வில்லேகாஸ்  என்பவர் இவ்விரு கருத்துக்களையும் உண்மை எனக் கூறியுள்ளார்.
2016-ம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்பார் என இவர் 2015-ம் ஆண்டிலேயே சரியாக கணித்து கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது 2017-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி மூன்றாம் உலகப்போர் தொடங்கும் என்ற பகீர் தகவலையும் வெளியிட்டுள்ளார்.
 
அமெரிக்கா, ரஷ்யா, வட கொரியா, சிரியா மற்றும் சீனா ஆகிய 5 நாடுகளும் இந்த மூன்றாம் உலகப்போரில் பங்கேற்கும்.
இந்த மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாவதற்கு டொனால்டு டிரம்ப் தான் காரணமாக இருப்பார்.
மே 13 முதல் அக்டோபர் 13-ம் தேதிக்குள் மூன்றாம் உலகப்போரின் பேரழிவை உலகம் சந்திக்கும்.
இந்த யுத்தத்தில் சிரியா அதிபர் ஆசாத் வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்படுவார்.
மேலும், மூன்றாம் உலகப்போருக்கு பின்னர் ‘பேரழிவின் மன்னர்’ என டொனால்ட் டிரம்ப் அழைக்கப்படுவார் ஹொரசியோ என கணித்துள்ளார்
.
http://kaalaimalar.net/world-war-iii-will-begin-on-may-13-2017-mystic-horacio/

Related Posts: