செவ்வாய், 18 ஏப்ரல், 2017

வாகனங்களுக்கான மூன்றாம் நபர் விபத்து காப்பீடு கட்டணம் குறைப்பு! April 17, 2017

வாகனங்களுக்கான மூன்றாம் நபர் விபத்து காப்பீடு கட்டணம் குறைப்பு!


வாகனங்களுக்கான மூன்றாம் நபர் விபத்து காப்பீடு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து அவர்களின் கோரிக்கையை ஏற்று வாகனங்களுக்கான மூன்றாம் நபர் விபத்து காப்பீடு கட்டணம் குறைக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் புதிய கட்டணங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் இந்த மாதம் முதல் அமலாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ஆயிரம் முதல் ஆயிரத்து 500 சிசி வரையிலான கார்களுக்கு 2 ஆயிரத்து 863 ரூபாயாக காப்பீடு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 500 சிசி-க்கு மேல் திறன் உள்ள கார்களுக்கு 7 ஆயிரத்து 890 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

150 சிசி திறன் உள்ள இரு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், சரக்கு வாகனங்களுக்கான காப்பீடு கட்டணமும் 33 ஆயிரத்து 24 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 

ஆயிரம் சிசி-க்கு குறைவான திறன் உள்ள கார்களுக்கான கட்டணத்தில் மாற்றமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: