வைகை அணை நீர்த்தேக்கத்தில் தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க வைக்கப்பட்ட தெர்மாகோல்கள் காற்றில் பறந்தன. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்தேக்கத்தில் நீர் ஆவியாவதை தடுக்கும் நோக்கத்தில் 10 லட்சம் மதிப்பில் தெர்மாக்கோல் அட்டைகளை மிதக்கவிடும் பணிகள் தொடங்கப்பட்டது. இதனை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
இதனிடையே, வைகை அணை நீர் ஆவியாவதை தடுக்கும் நோக்கில், அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்த திட்டத்தின்படி போடப்பட்ட தெர்மாக்கோல்கள், முறையாக அமைக்கப்படாததால் அடுத்த சில நிமிடங்களிலேயே கரை ஒதுங்கின. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நீர் ஆவியாவதை தடுக்க தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ மேற்கொண்ட முயற்சி இவ்வாறு இருக்க, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து நீர் ஆவியாவதை தடுக்க நூதன முறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த திட்டத்தின்படி, தொல்மாகோல்களால் ஆன கருப்பு பந்துகளை நீரின்மேல் மிதக்கவிடப்படுகின்றன. தண்ணீர் பரப்பு முழுவதும் சிறிய இடைவெளி கூட இல்லாமல் அவை மிதக்கின்றன. இதன் மூலம் நீரை உறிஞ்சாமலும், நீர் ஆவியாவது தடுக்கப்பட்டும் வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவைப் போல் நீர் மேலாண்மை திட்டங்களைத் தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இதனிடையே, வைகை அணை நீர் ஆவியாவதை தடுக்கும் நோக்கில், அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்த திட்டத்தின்படி போடப்பட்ட தெர்மாக்கோல்கள், முறையாக அமைக்கப்படாததால் அடுத்த சில நிமிடங்களிலேயே கரை ஒதுங்கின. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நீர் ஆவியாவதை தடுக்க தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ மேற்கொண்ட முயற்சி இவ்வாறு இருக்க, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து நீர் ஆவியாவதை தடுக்க நூதன முறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த திட்டத்தின்படி, தொல்மாகோல்களால் ஆன கருப்பு பந்துகளை நீரின்மேல் மிதக்கவிடப்படுகின்றன. தண்ணீர் பரப்பு முழுவதும் சிறிய இடைவெளி கூட இல்லாமல் அவை மிதக்கின்றன. இதன் மூலம் நீரை உறிஞ்சாமலும், நீர் ஆவியாவது தடுக்கப்பட்டும் வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவைப் போல் நீர் மேலாண்மை திட்டங்களைத் தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.