செவ்வாய், 31 அக்டோபர், 2017

மழை காரணமாக அறுவடை பாதிப்பு; வெங்காய விலை ஏற்றம்..! October 31, 2017

ஓமலூர் வட்டாரத்தில் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி வெங்காயம் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரப் பகுதிகளில் விவசாயம் முதன்மைத் தொழிலாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் வெங்காயம் நடவு செய்திருந்தனர். வெங்காயம் விளைந்து அறுவடைக்குத் தயாராகும் காலத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் வெங்காயம் வயலோடு அழுகி விட்டது. இதனால்,...

குடிநீருக்கான ஏரியில் கழிவுநீரை கலக்க முயன்ற அதிகாரிகள்! October 31, 2017

சென்னை அம்பத்தூர் அருகே கொரட்டூர் ஏரியின் கரையை உடைத்து கழிவுநீரை விட முயன்ற அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விட்டு விட்டு பெய்து வரும் கன மழையால் அம்பத்தூர், பட்டரைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீருடன், கழிவு நீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனை அகற்ற வழி தெரியாத சென்னை மாநகராட்சி அதிகாரிகள்...

சந்திராயன்-2 செயற்கைக்கோள் அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படுகிறது October 9, 2017

நிலவை ஆராய்ச்சி செய்வதற்கான சந்திராயன்-2 செயற்கைக்கோள், அடுத்தாண்டு ஏவப்பட உள்ளதாக, மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் பாண்டியன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இதனை தெரிவித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், அக்டோபர் 4 முதல் 10 வரை உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள இந்து...

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! October 31, 2017

வடகிழக்கு பருமழை காரணமாகவும் இலங்கையையொட்டி வங்கக் கடலில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில்  நேற்று காலை முதலே பெய்யத் தொடங்கிய மழையால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் குளம் போல் தேங்கியது. இந்நிலையில் இரவிலும் நீடித்த கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால்...

சென்னை, திருவள்ளூர் உட்பட 9 கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! October 30, 2017

கனமழை காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளி வகுப்புகளையும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக முடிக்க ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு.தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,...

வேலை இல்லா திண்டாட்டம்

...

திங்கள், 30 அக்டோபர், 2017

சித்தா மற்றும் பாரம்பரிய மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை அளிப்பது சட்டப்படி குற்றம்’ October 27, 2017

ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா மற்றும் பாரம்பரிய மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிப்பது சட்டப்படி தவறு என உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.சிவகங்கை பாப்பன்குளத்தைச் சேர்ந்த காட்டுராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில், ஹோமியோபதி படித்த தனது மனைவியை போலி மருத்துவர் என போலீஸார் கைது செய்ததாகவும், அவருடன் தனது இருமாதக் குழந்தையை அழைத்துச் சென்றனர் என்றும், தனது மனுவில்...

மண்ணெண்ணெய் , பால்டாயில், தூக்குக் கயிற்றுடன் வந்த விவசாயிகள்..! October 27, 2017

பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு தொகை வழங்காததைக் கண்டித்து நாகையில், குறைதீர்க் கூட்டத்திற்கு விவசாயிகள் மண்ணெண்ணெய்  பாட்டில், பால்டாயில், தூக்குக் கயிற்றுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்ட ஆட்சியர் அரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவித்திருந்தார். அதன்படி கூட்டத்திற்கு விவசாயிகள் பலர் மண்ணெண்ணெய்...

டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி! October 27, 2017

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, டெல்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சோனியா காந்தி, சமீப காலமாக பொது நிகழ்ச்சிகள் மற்றும் கட்சிப் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்து வந்தார். கடைசியாக சில வாரங்களுக்கு முன், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில்,...

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் கைது! October 29, 2017

காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த பகத்சிங் என்பவர் சேலம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.ஊத்தங்கரை தாலுக்கா, சிங்காரப்பேட்டை அருகே அம்பேத்கார் நகரை  சேர்ந்தவர் பகத்சிங். மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த இவர் கடந்த 2002ல் ஊத்தங்கரையில் பொடா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தவர். அதன் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து...

ஏடிஎம் காவலாளியை சுத்தியலால் கொடூரமாக தாக்கிய கொள்ளையன்! October 29, 2017

கோவா தலைநகர் பனாஜியில், வங்கி ஏடிஎம் மையம் ஒன்றில் கொள்ளையை தடுக்க முயன்ற காவலரை, அந்த கொள்ளையன் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சுத்தியலால் அந்த கொள்ளையன் கொடூரமாக தாக்குதல் நடத்தும் காட்சி, கண்போரை பதற வைக்கும் வகையில் உள்ளது. ஒரு வழியாக போராடி, கொள்ளையனிடம் இருந்து சுத்தியலை பறித்த காவலர், திருப்பித்தாக்க முயன்றபோது, கொள்ளையன் தப்பியோடி விட்டான்.காவலாளியின்...

300 ஏடிஎம் மையங்கள் மூடல்..! October 28, 2017

மத்திய அரசு டிஜிட்டல் பண பரிமாற்ற நடைமுறைக்கு முன்னுரிமை அளித்து வருவதால், நகர்புறங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு ஆதரவான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் நகர்புறங்களில் உள்ள ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கையை பல்வேறு வங்கிகள்...

சனி, 28 அக்டோபர், 2017

​பறவைகளை விரட்ட விவசாயி கண்டுபிடித்த கருவி! October 28, 2017

இந்தியாவின் வடமாநில விவசாயி ஒருவர் வேளாண் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் பறவைகளை விரட்டக் கையாளும் புதிய யுக்தி இணையதளங்களில் பரவி வருகிறது.காற்றாடியின் தகடுகளையும், வீணாகக் கிடக்கும் சில உலோகப் பொருட்கள் மற்றும் ஒரு தட்டைப்  பயன்படுத்தி அந்த விவசாயி உருவாக்கியுள்ள ஒரு இயந்திரம் காற்றின் ஆற்றலால் இயங்கக்கூடியது.காற்று வேகமாக வீசும் பொழுது, அதில் பொருத்தப்பட்டுள்ள...

சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் அரசு மருத்துவமனை ஊழியர்களின் குடியிருப்பு! October 28, 2017

சென்னையில், அரசு மருத்துவமனை ஊழியர்களின் குடியிருப்பே சுகாதாரமற்ற நிலையில் உள்ளது அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கடுமையாக உள்ள நிலையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கோஷா அரசு மகப்பேறு மருத்துவமனை ஊழியர்களின் குடியிருப்பே மிக மோசமான நிலையில்...

மழைக்காலம்! October 28, 2017

தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில்  கன மழையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்  கூறினார்.கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் , வட தமிழகத்தில் ஓரிரு...

ரேஷன் சர்க்கரை விலை அதிரடி உயர்வு! October 28, 2017

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை கிலோ 25 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரும் 1 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.தமிழகத்தில் பச்சை நிற ரேஷன் அட்டைகள் வைத்துள்ளவர்களுக்கு அதிகபட்சமாக 2 கிலோ சக்கரை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ சர்க்கரை 13 ரூபாய் 50 காசு விலையில் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழக அரசு சர்க்கரை விலையை திடீரென்று கிலோவுக்கு...

இந்தியாவில் அதிக நன்கொடை பெற்ற கட்சிகளின் பட்டியல் வெளியீடு! October 28, 2017

இந்தியாவில் 2015-2016-ம் நிதியாண்டில் அதிக நன்கொடை பெற்ற மாநிலக் கட்சிகளின் பட்டியலில் திமுக முதலிடத்தைப் பிடித்துள்ளது.ஜனநாயக சீர்திருத்தம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், 2015-2016-ம் நிதியாண்டில் திமுக ரூ.77.63 கோடி  நன்கொடையாக பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ரூ.54.93 கோடி நன்கொடையாக பெற்று அதிமுக 2-வது இடத்தை பிடித்துள்ளது. 3-வது இடத்தை தெலுங்கு தேசம்...

ஒரு கிராமத்துக்கே ஒரே பிறந்தநாள் அச்சடித்துக்கொடுத்த ஆதார்! October 28, 2017

உத்தரகாண்ட் மாநிலம் கைந்தி என்கிற கிராமத்தில் சுமார் 800 குடியிருப்புகள் உள்ளன. இந்தக்குடியிருப்புகளில் இருக்கக்கூடிய மக்கள் அனைவருக்கும் இந்திய ஆதார் மையம் சார்பாக ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டை அனைத்திலும், கிராம மக்கள் அனைவருக்கும் ஒரே பிறந்தநாள் அச்சடித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதைப்பார்த்துஅந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்....

​குஜராத்தில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ராட்சத கடல் ஜுராசிக் புதைபடிமம் கண்டுபிடிப்பு! October 28, 2017

குஜராத் மாநிலம் லோடாய் கிராமத்தில் இந்திய புதைபடிமவியல் ஆராய்ச்சியாளர்கள் மிக முக்கியமான ஆராய்ச்சி முடிவை எட்டியுள்ளனர். அந்த கிராமத்திலிருந்து சுமார் 157-152 மில்லியன் ஆண்டுகள் பழமையான ராட்சத கடல் ஜுராசிக் புதைபடிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குஜராத்தில் உள்ள இந்த படிமத்தை பேராசியர் குண்டுபள்ளி வி.பிரசாத் தலைமையிலான குழு கண்டடைந்துள்ளது. இந்த ஜுராசிக் 5.5 மீட்டர் நீளமுடையதாக...

இந்துத்துவத்திற்கு எதிராக எழுதிய எழுத்தாளர் காஞ்சா இலையா வீட்டுச்சிறையில் அடைப்பு! October 28, 2017

புகழ்பெற்ற தலீத் வரலாற்று ஆய்வாளரும், இந்துத்துவ கருத்தியலுக்கு எதிராக எழுதிவரக்கூடியவருமான காஞ்சா இலையா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.ஹைதரபாத்தில் தரங்காவில் இருக்கும் அவரது வீட்டில் காஞ்சா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிராக காஞ்சாவின் ஆதரவாளர்கள் அவர் வீட்டு வாசலில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.விஜயவாடாவில் நடக்க இருந்த ஒரு பொதுக்கூட்டத்தில்...

"கனமழை பெய்தால் வடசென்னை மூழ்கும்" October 27, 2017

வடகிழக்கு பருவமழை ஓரிரு நாளில் தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆனால், எண்ணூர் பகுதியில் செயல்படும் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பலாலும், நீர்வழித் தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும், வடசென்னை பகுதிக்கு வெள்ள அபாயம் உருவாகியுள்ளது. சென்னையில் 2015ம் ஆண்டு டிசம்பரில், அடையாறு பாயும் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அவ்வளவு...

கொள்ளுப் பேரன் திருமணத்தை நடத்தி வைக்கிறார் கருணாநிதி! October 28, 2017

தனது கொள்ளுப்பேரனின் திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி, சென்னையில் அடுத்த வாரம் நடத்தி வைக்கிறார். கருணாநிதியின் மகன் மு.க.முத்து - சிவகாம சுந்தரி தம்பதியரின் மகள் வழி பேரனான மனு ரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரமின் மகளான அக்ஷிதாவிற்கும் கடந்த ஜூலை 10ம் தேதி திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.  இவர்களின் திருமணம் அடுத்தவாரம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின்...

மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி! October 28, 2017

நாடு முழுவதும் பொறியியல் பட்டதாரிகளின் வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிக்க ஏதேனும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா?  என்பது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.30 தனியார் பொறியியல் கல்லூரிகளை மட்டும் தேர்வு செய்து, அண்ணா பல்கலைக்கழகம் வளாக நேர்முகத் தேர்வு நடத்துவதை எதிர்த்து கரூரை சேர்ந்த நடராஜன் என்பவர்...

பயனீட்டாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய வாட்ஸ் அப்! October 28, 2017

பல கோடி பயனீட்டாளர்களின் நீண்ட கால கோரிக்கையை வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது நிறைவேற்றியுள்ளது. சர்வதேச அளவில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் சமூகவலை தளங்களுள் வாட்ஸ் அப் செயலி முக்கியபங்குவகிக்கிறது. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரில் கிட்டதட்ட அனைவருமே வாட்ஸ் அப் செயலியையும் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாட்ஸ்அப் மூலம் தனிப்பட்ட நபர்களுக்கு...

MK Patti : ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை பெறாதவர்கள்

ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை பெறாதவர்கள் , பட்டியலில் உள்ளது , தங்களது முழு தகவலக்கை (குடும்ப தலைவர் புகை படம், குடும்ப உறுப்பினர், பெயர் சேர்த்தால் - நீக்குதல் ) தகவல்களை இலுப்பூர் தாலுகா அலுவலகம் அல்லது நெட் சென்டர் அணுகி பதிவேற்றம் செய்யவேண்டும் இல்லை என்றல் , தங்களுடைய குடும்ப அட்டை ரத்தாகிவிடும் . ...

வெள்ளி, 27 அக்டோபர், 2017

வனத்துறை ஊழியரை அடித்து உதைத்த கிராம மக்கள்..! October 27, 2017

திருவண்ணாமலை அருகே வனத்துறை ஊழியரை பொதுமக்கள்  சராமரியாக அடித்து உதைத்த சம்பவம், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி திருமலை என்பவர்,  மாட்டுவண்டியில் மணல் எடுத்து விற்று வந்துள்ளார். இந்நிலையில், காட்டுப்பகுதியில் அவரை வனத்துறையினர் தாக்கியதாகவும், இதில் அவர், உயிரிழந்ததாகவும்  உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்....

எண்ணூர் அனல் மின் நிலையத்தால் வெள்ள அபாயத்தில் வடசென்னை! October 27, 2017

வடகிழக்கு பருவமழை ஓரிருநாளில் தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆனால், எண்ணூர் பகுதியில் செயல்படும் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பலாலும்,  நீர்வழித் தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும், வடசென்னை பகுதிக்கு வெள்ள அபாயம் உருவாகியுள்ளது.சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில், அடையாறு பாயும் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை...

​தேவர் சிலை தங்கக் கவசம்: வங்கி அதிகாரிகளுடன் மதுரை ஆட்சியர் பேச்சுவார்த்தை..! October 27, 2017

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கான தங்கக் கவசத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பேங்க் ஆஃப் இந்தியா மதுரை வங்கிக் கிளை பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள தங்கக் கவசத்தை, வெளியே எடுக்கும் அதிகாரம் அதிமுக பொருளாளருக்கும், தேவர் நினைவிட பொறுப்பாளர் ஆகிய இருவருக்கும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எடப்பாடி...

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு! October 27, 2017

உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படுவதற்கு தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இதையடுத்து அங்கு தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது.இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க...

தபீஹா , ஹலால் வித்தியாசம் என்ன?

...

​டெங்கு கொசு: வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு! October 27, 2017

திப்பூரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த டாஸ்மாக் பார் உட்பட பல இடங்களுக்கு 8லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.இதன் ஒருபகுதியாக திருப்பூர் சந்தைப்பேட்டை அருகே உள்ள டாஸ்மாக் பாரில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி செய்யும் வகையில் சுகாதார...

வியாழன், 26 அக்டோபர், 2017

already exposed Jaggi and his Jaggu's - thanks IBC Tamil

...

24 மணி நேரத்தில் மழை: 24 மணி நேரம் செயல்படும் கட்டுபாட்டு அறை October 26, 2017

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சூழல் சாதகமாக இருப்பதாக தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை குன்னூரில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், தமிழகத்தில்...

மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கும் திட்டத்தில் மாற்றம்? October 26, 2017

மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதற்கு பதிலாக மாற்று ஆவணங்களை பயன்படுத்த ஆலோசித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாதுகாப்பு காரணங்களுக்காக மொபைல் எண்ணுடன் ஆதாரை, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு இணைக்காவிட்டால் மொபைல்...